WhatsApp பயனர்கள் கவனத்திற்கு – மல்டி டிவைஸ் அம்சம்! புதிய அறிமுகம்!
இரண்டு போன்களில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தும் புதியதொரு அம்சத்தை நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த அம்சத்தில் வாட்ஸ்அப் பயனர்கள் இணைய இணைப்பு இல்லாமலும் செய்திகளை பரிமாறிக் கொள்ளலாம்.
புதிய அம்சம்
உலகின் முன்னணி தகவல் தொடர்பு சாதனமான வாட்ஸ்அப் சமீபத்தில் மல்டி-டிவைஸ் அம்சதை அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சம் பயனர்கள் ஒரே நேரத்தில் மூன்று சாதனங்களில் WhatsAppஐ பயன்படுத்த அனுமதிக்கிறது. ஆனால் அந்த சாதனங்களில் ஸ்மார்ட்போன் இடம்பிடிக்க முடியாது. இருப்பினும், இந்த சேவை விரைவில் மாறலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து WABetaInfo வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, வாட்ஸ்அப் புதிய துணை பயன்முறையில் செயல்படுகிறது.
கனமழையால் பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு – மக்கள் அவதி!
அதன்படி 2.0 என விளம்பரப்படுத்தப்படும் பல சாதனங்கள் கொண்ட இந்த அம்சம் சமீபத்தில் ஆண்ட்ராய்டு பதிப்பு 2.22.15.1க்கான WhatsApp பீட்டாவில் காணப்பட்டது. இந்த துணை பயன்முறையில், உங்கள் வாட்ஸ்அப் கணக்கில் இரண்டாவது மொபைலை இணைக்க முடியும். மேலும் இதன் சிறந்த பகுதி என்னவென்றால் மொபைலுடன் இணைக்கப்பட்ட 2வது சாதனத்தில் இருந்து செய்திகளை அனுப்ப, உங்கள் முதன்மை தொலைபேசியில் இணைய இணைப்பு தேவையில்லை என்பது தான்.
Exams Daily Mobile App Download
இந்த அம்சம் இணையம் அல்லது டெஸ்க்டாப்பில் வாட்ஸ்அப் செயல்படும் முறையைப் போலவே செயல்படும் என்று கூறப்படுகிறது. மேலும் நீங்கள் இணையம் அல்லது டெஸ்க்டாப் துணையை பயன்படுத்தும் போது இந்த செயல்முறைக்கு சிறிது நேரம் ஆகலாம். இப்போது, வாட்ஸ்அப் இந்த அம்சத்தை எப்போது வெளியிடும் என்பது உறுதியாக தெரியவில்லை. என்றாலும் இப்போதைக்கு, வாட்ஸ்அப் ஒரு பரந்த பீட்டா சோதனையை தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.