IPL 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – புதிதாக அறிமுகமாகும் 3 வீரர்கள் இவர்கள் தான்?
நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி இந்த ஆண்டு ஐபிஎல் 2022 போட்டிகளில் 3 புதிய மற்றும் இளம் வீரர்களை அறிமுகம் செய்து வைக்க இருக்கிறது. அந்த வீரர்கள் யார் என்ற முழு விவரங்களையும் இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
சென்னை சூப்பர் கிங்ஸ்:
வரும் மார்ச் 26ம் தேதியன்று துவங்க இருக்கும் இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) போட்டிகள் மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளது. இந்த முறை வழக்கத்தை விட சற்று முன்னதாகவே துவங்க இருக்கும் IPL கிரிக்கெட் போட்டிகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. அந்த வகையில் 2 புதிய அணிகள், கேப்டன்கள், ஸ்பான்சர், போட்டி முறைகள் என பல விஷயங்கள் புதிதாக இடம்பிடித்திருக்கிறது. இப்போது போட்டிகள் துவங்க இன்னும் 5 நாட்கள் மட்டுமே மீதமிருக்கும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியை எதிர்கொள்கிறது.
TCS நிறுவனத்தில் ரூ.7 லட்சம் ஊதியத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்த இரு அணிகளை பொருத்தளவு, இதுவரை 19 IPL போட்டிகளில் விளையாடி CSK அணி 12 ஆட்டங்களில் வென்றுள்ளது. அதே நேரத்தில் KKR அணி வெறும் 7 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. அந்த வகையில் இந்த முறையும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி, KKR அணிக்கு எதிரான தனது வெற்றியுடன் இந்த சீசனை துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இப்போது IPL 2022ன் முதல் ஆட்டத்திற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியில் அறிமுகமாக இருக்கும் 3 புதிய இளம் வீரர்களைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.
டுவைன் பிரிட்டோரியஸ்:
ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணிக்காக வெளிநாடுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் டுவைன் பிரிட்டோரியஸ் ஒருவர் ஆவார். இப்போது மொயீன் அலியின் இந்திய வருகை விசா பிரச்சனைகளால் தாமதமாக, தென்னாப்பிரிக்க ஆல்-ரவுண்டர் ஆன டுவைன் பிரிட்டோரியஸ் விளையாடும் XI இல் இடம்பிடிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. டுவைன் பிரிட்டோரியஸ் பந்தைக் கையாள்வதில் மிகவும் எளிமையானவர் மற்றும் பெரிய ஷாட்களை அவரால் அடிக்க முடியும்.
ராஜ்வர்தன் ஹங்கர்கேகர்:
வயது மோசடி வழக்கில் சிக்கிய போதிலும், ஹங்கர்கேகர் ஐபிஎல்லில் விளையாட அனுமதிக்கப்பட்டார். அந்த வகையில் IPL 2022 மெகா ஏலத்தில் CSK அணியால் எடுக்கப்பட்ட இவர் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என இரண்டிலும் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இப்போது இந்த சீசனின் பெரும்பகுதியை தீபக் சாஹர் தவறவிட்டதால், பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் ஹங்கர்கேகரின் ஆல்ரவுண்ட் திறன்களை கருத்தில் கொண்டு அவர் பிளேயிங் XI அணியில் சிறந்த மாற்றாக இருக்க முடியும்.
ஹரி நிஷாந்த்:
TNPL 2021ல் ஒன்பது போட்டிகளில் விளையாடி 368 ரன்களை குவித்த நிஷாந்த் இந்த முறை தனது அடிப்படை விலையான 20 லட்சத்திற்கு CSK அணியால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் நீண்ட காலமாக தமிழ்நாடு உள்நாட்டு போட்டிகளில் ஒரு தொடக்க பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பராக பணியாற்றி இருக்கிறார். இதற்கு முன்னதாக கடந்த 2020ம் ஆண்டில் CSK அணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹரி நிஷாந்த் இதுவரை ஒரு போட்டியில் கூட கலந்து கொள்ளவில்லை. என்றாலும் இந்த சீசனில் இவர் பிளேயிங் XI அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.