தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து – ஓய்வூதியதாரர்கள் கோரிக்கை!
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் அனைவரும் பல வருடங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், அஞ்சல் துறை ஓய்வூதியதாரர்கள் நேற்று நடந்த மாநாட்டில் இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.
புதிய ஓய்வூதிய திட்டம்:
கடந்த 2003 ஆம் ஆண்டிற்கு பிறகு அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனால், இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் குடும்ப ஓய்வூதியம் கிடையாது என பல பாதகமான அம்சங்கள் இடம் பெற்ற காரணத்தினால் ஊழியர்கள் அனைவரும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலுக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
தமிழகத்தில் வேலையில்லா பட்டதாரிகள் கவனத்திற்கு – தூத்துக்குடியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்!
ஊழியர்களின் இந்த கோரிக்கைகளை ஏற்று ராஜஸ்தான் மற்றும் சத்திஸ்கர் மாநிலத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து பல மாநில ஊழியர்களும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தும்படி கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போது அஞ்சல் துறை ஓய்வூதியதாரர்கள் அனைவரும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனா். இந்நிலையில், நேற்று அகில இந்திய அஞ்சல், ஆா்எம்எஸ் ஓய்வூதியா் சங்கத்தின் ஈரோடு கோட்ட மாநாடு நடைபெற்றது.
Exams Daily Mobile App Download
இந்த மாநாட்டில் மத்திய அரசு புதிய ஓய்வூதியச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும், 65 வயதிற்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளன. மேலும், மாதாந்திர மருத்துவப் படியை ரூ. 3,000ஆக உயா்த்த வேண்டும் எனவும், அனைத்து மூத்த குடிமக்களுக்கும் குறைந்தபட்சம் ரூ. 3,000 ஆவது ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.