தமிழகத்தில் வேலையில்லா பட்டதாரிகள் கவனத்திற்கு – தூத்துக்குடியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்!
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மைய அலுவலகத்தில் வரும் ஜூன் 10-ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதால் விருப்பமுள்ளவர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு முகாம்:
தமிழகத்தில் உள்ள படித்து வேலையின்றி சுற்றி திரியும் இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு வேலைவாய்ப்பு துறை சார்பாக அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவலின் காரணமாக தமிழகத்தில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படவில்லை. மேலும், எந்த நிறுவனங்களும் எந்த வேலைவாய்ப்பையும் புதிதாக அறிவிக்கவில்லை. இதனால் இளைஞர்கள் அனைவரும் வேலையின்றி திண்டாடி கொண்டிருக்கின்றனர்.
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ் – ஊக்கப்பரிசு மற்றும் ஊக்கத்தொகை!
ஒவ்வொரு மாவட்டத்திலும் இளைஞர்களின் நலனுக்காக தற்போது வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் வரும் வெள்ளிக்கிழமை ( ஜூன் 10) காலை 10.30 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ, மற்றும் கம்ப்யூட்டர் பயிற்சி முடித்த அனைவருமே கலந்துகொள்ளலாம்.
Exams Daily Mobile App Download
தகுதியும் விருப்பமும் பெற்ற மற்றும் தனியார் துறையில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் தங்களது பயோடேட்டாவுடன் கல்வி சான்றிதழ்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு முகாமில் கலந்து கொள்ளுமாறு தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் உதவி இயக்குனர் பேச்சியம்மாள் அறிவித்துள்ளார். மேலும், தனியார்துறையில் வேலை கிடைத்துவிட்டால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து ஆகாது எனவும் அறிவித்துள்ளார்.