தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து? ஹாப்பி நியூஸ் சொல்வாரா முதல்வர்!
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயலுக்கு கொண்டு வருமாறு நாகை மாவட்டத்தில் நடைபெற்ற தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் அரசு ஊழியர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
பழைய ஓய்வூதிய திட்டம்:
தமிழகத்தில் சென்ற ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது திராவிட முன்னேற்ற கழகம். மேலும் அவர்கள் பல தேர்தல் வாக்கு உறுதியையும் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் பெரும்பான்மை தொகுதியிலும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் தங்களது தேர்தல் வாக்கு உறுதிகளை ஒவ்வொன்றாக செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில வருடங்களாகவே அரசு ஊழியர்கள் சார்பில் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. அந்த கோரிக்கை என்னவென்றால், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஓய்வுக்கு பின்னர் அவர்களுக்கு ஓய்வூதியம் வரும் படியான திட்டம் செயல்முறையில் இருந்து வந்தது.
புதுச்சேரி பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – 4 நாட்கள் தொடர் விடுமுறை!
தமிழ்நாடு அரசுக்கு இருந்த நிதி பற்றாகுறையின் காரணமாக பழைய ஓய்வூதிய முறை ரத்து செய்யப்பட்டு, புதிய ஓய்வூதியத் திட்டத்தை கடந்த 2003ம் ஆண்டு முதல் செயல்முறையில் இருந்து வருகிறது. மேலும் புதிய ஓய்வூதிய திட்டமானது, ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்காமல் பணி ஓய்வு பெறும்போது ஒரு குறிப்பிட்ட தொகையை மொத்தமாக வழங்கும் அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இந்த திட்டத்துக்கு அரசு ஊழியர்களில் தரப்பில் எதிர்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மறுபடியும் பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் அரசு ஊழியர்கள் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேலாக கோரிக்கையாக வைத்து வருகின்றனர்.
தமிழகத்தில் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!
இந்நிலையில் தற்போது நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் தமிமுல் அன்சாரி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தனஞ்ஜெயன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணை தலைவர் பிரபாகரன் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் பூபதி வரவு-செலவு அறிக்கையை வாசித்தார். இதில் மாவட்ட இணை செயலாளர் கிருஷ்ணன் பேசினார். மேலும் இந்த கூட்டத்தில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். வருவாய்த்துறையில் பட்டதாரி அல்லாத உதவியாளர்களின் பதவி உயர்வு பாதுகாக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட, வட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.