புதுச்சேரி பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – 4 நாட்கள் தொடர் விடுமுறை!

0
புதுச்சேரி பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் - 4 நாட்கள் தொடர் விடுமுறை!
புதுச்சேரி பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் - 4 நாட்கள் தொடர் விடுமுறை!
புதுச்சேரி பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – 4 நாட்கள் தொடர் விடுமுறை!

புதுச்சேரியில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல செயல்படத் தொடங்கியுள்ளன. இதையடுத்து தற்போது பொதுத்தேர்வுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பள்ளிகளுக்கு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட உள்ளது.

பள்ளி விடுமுறை

இந்தியாவில் தென்னாப்பிரிக்காவில் உருவான ஓமைக்ரான் தொற்று காரணமாக கொரோனாவின் 3ம் அலையின் தாக்கம் பரவத் தொடங்கியது. அதனால் மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. மேலும் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி பல மாநிலங்களில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல செயல்படத் தொடங்கியுள்ளன. அத்துடன் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது.

மீண்டும் முழு ஊரடங்கு அமல் – அரசு முடிவு!

இதே போல புதுச்சேரியிலும் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து கட்நத பிப்ரவரி மாதத்தில் இருந்து 1 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு கட்டாயமான முறையில் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார். மேலும் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பாடங்கள் முடிக்கப்படாமல் உள்ளதால் வாரத்தில் 6 நாட்களும் முழு நேரமாக பள்ளிகள் செயல்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அத்துடன் நடப்பு ஆண்டில் கொரோனா காரணமாக குறைவான நாட்களில் நேரடி வகுப்புகள் நடைபெற்றது. அதனால் பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் தயாராக குறைவான நாட்களே உள்ளது.

மத்திய அரசின் IPRCL நிறுவனத்தில் வேலை – ஆரம்ப ஊதியம் ரூ 60,000..!

இந்த நிலையில் வருகிற ஏப்ரல் 14ம் தேதி அன்று சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு தினத்தை கொண்டாட அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மறுநாள் புனித வெள்ளி தினமான ஏப்ரல் 15ம் தேதியும் அரசு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதே போல் ஏப்ரல் 17ம் தேதி அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வார விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளியூர்களுக்குச் சென்று பண்டிகையை கொண்டாடும் மக்கள் நடுவில் வர வேண்டி இருக்கும் என்பதால் ஏப்ரல் 16ம் தேதி சனிக்கிழமை அன்றும் அரசு விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று கொண்ட அரசு வருகிற ஏப்ரல் 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை என தொடர்ந்து 4 நாட்கள் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை என்று புதுவை அரசு அறிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!