மீண்டும் முழு ஊரடங்கு அமல் – அரசு முடிவு!
சீன நகரம் ஷாங்காயில் கொரோனா இரண்டாம் கட்ட பரிசோதனை நடைபெற உள்ள நிலையில் இதனை பொறுத்து ஊரடங்கு விதிப்பு மற்றும் தளர்வுகள் குறித்து முடிவு எடுக்கப்படும் என்று ஷாங்காய் நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஊரடங்கு:
கடந்த 2019ம் ஆண்டில் இறுதியில் இந்தியாவில் அண்டை நாடான சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா என்னும் கொடிய வைரஸ் தொற்று மக்களை கடும் பாதிப்புக்கு உள்ளாகியது. ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எளிதாக பரவும் தன்மை கொண்ட இந்த வைரஸ் கோரத்தாண்டவம் ஆடியது. சீனாவை தொடர்ந்து அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான் இந்தியா போன்ற நாடுகளுக்கும் பரவ தொடங்கியது. அதனால் உலக நாடுகள் கொரோனாவால் கடும் சவாலை சந்தித்தது. இந்த கொரோனா வைரஸ் அடுத்தடுத்து உருமாற்றம் அடைந்து டெல்டா, ஓமிக்ரான் மற்றும் BA 2 என புதிய வைரஸ் அதிக வீரியத்துடன் பரவத் தொடங்கியது.
அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – புதிய விதிமுறைகள் வெளியீடு!
இதனால் தொற்று பாதிப்பு எண்ணிக்கையும், உயிரிழப்பும் தொடர்ந்து உயர்ந்தது. இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாட்டு அரசுகள் உலக சுகாதாரத்துறையின் உத்தரவிற்கிணங்க ஊரடங்கு மற்றும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டது. மேலும் 2 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்தது. இந்த நேரத்தில் சீனாவின் ஷாங்காய் நகரில் சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
அந்நகரில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 23,000 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதுவரை அப்பகுதியில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில், இரண்டாம் கட்ட கொரோனா பரிசோதனை நடைபெற்ற பிறகு, அடுத்த 14 நாட்களுக்குள் கொரோனா பாதிப்புகள் இல்லாத இடத்தில் தளர்வுகள் அளிக்கப்படும் என ஷாங்காய் நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.