தமிழக அரசு துறையில் புதிய வேலைவாய்ப்பு – மாதம் 2 லட்சம் வரை ஊதியம்! விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக அரசுத்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது கணக்கு அலுவலர் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுத்துறை காலிப்பணியிடங்கள்:
தமிழகத்தில் கடந்த மே மாதம் குரூப் 2 & 2A தேர்வின் முதல் நிலை தேர்வு நடைபெற்றது. அடுத்த கட்ட முதன்மை தேர்வர்கள் அனைவரும் முதல் நிலை தேர்வின் முடிவை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். அதனை தொடர்ந்து வரும் 24ம் தேதி TNPSC குரூப் 4 & VAO தேர்வு நடைபெற உள்ளது. மொத்தமாக 7,382 காலிப்பணியிடங்களுக்கு சுமார் 21.85 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அடுத்ததாக அரசு துறையில் காலியாக உள்ள 25 கணக்கு அலுவலர் பணிக்கான அறிவிப்பு வந்துள்ளது. இப்பணிக்கு எழுத்து தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பிக்க விரும்புவோர் www.tnpscexams.in என்ற இணையதளம் வாயிலாக ஆகஸ்ட் 13ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
TNPSC Group 2, 2A தேர்வு முடிவுகள் எப்போது வெளியீடு? தேர்வர்கள் எதிர்பார்ப்பு!
மேலும் விண்ணப்பதாரர்களுக்கு ஜூலை 1ம் தேதியின்படி, 32 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர், சீர்மரபினர், முஸ்லிம்கள், விதவைகள் போன்றோர்களுக்கு வயது வரம்பு இல்லை. இந்த கணக்கு அலுவலர் பணியிட தேர்வுக்கு இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் நடத்திய இறுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது. விண்ணப்பிப்பவருக்கு போதுமான தமிழறிவு இருக்க வேண்டியது அவசியம். இத்தேர்வானது அக்டோபர் மாதம் 8ம் தேதி கணினி வழியில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும் விண்ணப்பதாரர்கள் தேர்வு கட்டணமாக ரூ. 200 மற்றும் பதிவுக்கட்டணமாக ரூ.150 செலுத்த வேண்டும். விண்ணப்பிப்பது சந்தேகங்களுக்கு [email protected] அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு ரூ.56,900 முதல் ரூ.2,9200 வரை ஊதியம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட தகுதி உடையவர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம்.