கோபிக்கு அடுத்தடுத்து வரும் பிரச்சனைகள், தவிப்பில் குடும்பம் – “பாக்கியலட்சுமி” சீரியலில் இனி வருபவை!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் பாக்கியா வீட்டை விட்டு வெளியேறியதை நினைத்து குடும்பத்தில் அனைவரும் வருத்தத்தில் இருக்க, கோபி அனைவரும் பேசியதை நினைத்து வருத்தப்படுகிறார். இந்நிலையில் கோபி தலையில் அடுத்த பெரிய இடி ஒன்று விழ இருக்கிறது.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் குடும்பத்தில் நடக்க கூடாதது எல்லாம் நடந்துவிட்டது. கோபி இத்தனை நாள் குடும்பத்தை ஏமாற்றியது எல்லாம் பாக்கியாவிற்கும் குடும்பத்திற்கும் தெரிந்துவிட்டது. கோபி ராதிகா உறவு பற்றி தெரிந்த பின் பாக்கியாவால் அதை ஏற்று கொள்ள முடியவில்லை. பசங்க முன்னிலையில் பாக்கியா கோபியை பார்த்து பல கேள்விகளை கேட்க கோபியால் பதில் சொல்ல முடியாமல் தலை குனிந்து நின்றார். இதற்கு மேல் இந்த வீட்டில் இருக்க கூடாது என முடிவு செய்து பாக்கியா வீட்டை விட்டு வெளியேறிவிடுகிறார்.
தமிழக அரசு துறையில் புதிய வேலைவாய்ப்பு – மாதம் 2 லட்சம் வரை ஊதியம்! விண்ணப்பங்கள் வரவேற்பு!
அவருக்கு துணையாக செல்வியும் எழிலும் கிளம்பி செல்கின்றனர். கோவமாக சென்ற பாக்கியா நேராக தன்னுடைய அலுவலகத்திற்கு செல்கிறார். பாக்கியா வீட்டை விட்டு வெளியேறி சென்றதால் குடும்பத்தில் அனைவரும் வருத்தத்தில் இருக்கின்றனர். இனியா அம்மாவை நினைத்து அழுது கொண்டே இருக்க ஜெனி இனியாவிற்கு ஆதரவாக இருக்கிறார். குடும்பத்தில் அனைவரையும் ஜெனி தான் பார்த்துக் கொள்கிறார். மறுபக்கம் கோபி அனைவரும் பேசியதை நினைத்து வருத்தப்படுகிறார்.
Exams Daily Mobile App Download
கோபி தவறு செய்திருந்தாலும் செழியனும் ஈஸ்வரியும் அவர் மீது அக்கறையாக இருக்கிறார்கள். ஆனாலும் அவர்களை பற்றி கோபி நினைக்காமல் ராதிகாவை பற்றி அவருடைய அண்ணன் சந்துருவிடம் நலம் விசாரிக்கிறார் கோபி. இந்த விஷயம் குடும்பத்திற்கு தெரிய வந்தால் பெரிய பிரச்சனை வரும். அது மட்டுமில்லாமல் பாக்கியா ராதிகாவை சந்திக்க இருக்கும் நிலையில் அதனால் கோபிக்கு இனி பெரிய பிரச்சனை வர இருக்கிறது.