இந்தியாவுக்கு புதிய ஆபத்து, மீண்டும் ஊரடங்கு அமலாகுமா? அச்சத்தில் பொதுமக்கள்!
குரங்கு அம்மை என்ற அரிதான ஒரு வைரஸ் தொற்று உலக அளவில் 11 நாடுகளில் 80 பேருக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் பல்வேறு நாடுகளில் குரங்கம்மை பரவி வருவதையடுத்து உலக சுகாதார அமைப்பு இன்று அவசர கூட்டத்தை கூட்டி இருக்கிறது. இதில் குரங்கம்மை பரவுவதை தடுப்பது மற்றும் முன்னேற்படுகள் தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது.
புதிய வகை வைரஸ்:
கடந்த 2 வருடங்களாக உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் கோர பிடியில் சிக்கி தவிக்கிறது. இன்னும் இந்த நோய் தாக்கத்திலிருந்து நாம் மீண்டு வரவில்லை. இந்த தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டறியப்பட்டாலும், இவை உருமாற்றம் அடைந்து மக்களை ஆட்டிப்படைத்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஐரோப்பிய நாடுகளான இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல், சுவீடன் மற்றும் அமெரிக்கா, கனடா நாடுகளில் ‘மங்கிபாஸ்’ என்று அழைக்கப்படும் குரங்கம்மை வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
Exams Daily Mobile App Download
இந்த குரங்கம்மை வைரஸ் மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு பரவியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை ஐரோப்பிய நாடுகளில் 80-க்கும் மேற்பட்டவர்களுக்கு குரங்கம்மை வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இங்கிலாந்தில் குரங்கம்மை பாதித்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. இந்த வைரஸ் பாதித்தவர்களுக்கு சின்னம்மை, பெரியம்மையை விட அளவில் பெரிய கொப்பளங்கள் உடல் முழுவதும் அதிகமாக ஏற்படும் என தகவல்கள் கூறுகிறது.
தமிழக மின்வாரியத்தில் 10வது தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை – ரூ.8,050/- உதவித்தொகையுடன்…!
இந்தியாவில் குரங்கம்மை வைரஸ் பரவுவதை தடுக்க தீவிர கண்காணிப்புக்கு மத்திய சுகாதார அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக சுகாதார அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியது, நாடு முழுவதும் அனைத்து விமான நிலையங்கள், துறைமுகங்கள், எல்லைப் பகுதிகள் ஆகிய இடங்களில் தீவிரமாக கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த தொற்று பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து வருபவர்களிடம் வைரஸ் அறிகுறி தென்பட்டால் உடனடியாக மாதிரிகளை எடுத்து தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுவார்கள் என்று கூறினார். இந்நிலையில் கொரோனாவை தொடர்ந்து, குரங்கம்மை வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் மீண்டும் ஊரடங்கு அமலாகுமோ என்ற அச்சம் மக்களிடையே எழுந்து உள்ளது.