இந்திய ரயில் சேவையில் புதிய மாற்றங்கள் – தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!
சென்னையில் உள்ள ரயில்வே யார்டில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் சில குறிப்பிட்ட ரயில்களின் சேவைகள் மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே சென்னை ரயில் கோட்டம் அறிவித்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ரயில் சேவைகள்:
ரயிலில் தான் போக்குவரத்து செலவு கம்மி என்பதால் பலரும் ரயிலில் தான் பயணம் செய்ய விரும்புகின்றனர். கொரோனா காலகட்டத்திற்கு பிறகு மீண்டும் அனைத்து ரயில் சேவைகளும் துவங்கப்பட்டுள்ளது மற்றும் ரயில் பயணிகளுக்கும் அனைத்துவிதமான சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், தெற்கு ரயில்வே நிர்வாகம் அவ்வப்போது ரயில் சேவைகளில் சில மாற்றங்களை அறிவித்து வருகிறது. அதாவது, தாம்பரம் ரயில்வே யார்டில் இன்று காலை 9:55 மணி முதல் மதியம் 1:55 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது.
Exams Daily Mobile App Download
இதனால், சில குறிப்பிட்ட ரயில் சேவைகளுக்கான நேரம் மட்டும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதாவது காலை கிளம்ப வேண்டிய சென்னை எழும்பூர் வழியே மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் இன்று செங்கல்பட்டில் இருந்து மதியம் 2:40 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, புதுச்சேரி வழியாக புதுடெல்லிக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று கொண்டிருப்பதால் மாற்றுப்பாதை வழியாக செங்கல்பட்டு, அரக்கோணம், பெரம்பூர் வழியாக இயங்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் பான் & ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – நாளையே கடைசி நாள்!
மேலும், பராமரிப்பு பணிகள் நடைபெற்று முடிந்த பிறகு வழக்கம் போல சென்னை எழும்பூர் – மதுரை வைகை விரைவு ரயில் மற்றும் புதுச்சேரி – புதுடில்லி விரைவு ரயில் ஆகிய இரு ரயில்களும் வழக்கம் போல இயங்கும் எனவும் தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இத்துடன், இந்த இரண்டு ரயில் சேவைகளுக்கான நேரம் மாற்றப்பட்டுள்ளதால் பயணிகள் கவனமாக எந்தெந்த மாற்றுப்பாதை வழியாக ரயில் செல்ல இருக்கிறது என்பதை தெரிந்து பயணிக்கும்படி தெற்கு ரயில்வே சென்னை ரயில் கோட்டம் அறிவித்துள்ளது.