இந்தியாவில் பான் & ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – நாளையே கடைசி நாள்!
இந்தியாவில் முக்கிய ஆவணங்களாக விளங்கும் பான் – ஆதார் கார்டை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக அரசு கால அவகாசமும் அளித்துள்ளது. இந்நிலையில், அந்த காலா அவகாசத்திற்குள் இந்த வேலையை முடிக்காவிட்டால் பான் மற்றும் ஆதார் அட்டைதாரர்கள் பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
பான் – ஆதார் இணைப்பு:
இந்தியாவில் மத்திய அரசால் வழங்கப்படும் ஆதார் அட்டை ஒவ்வொரு குடிமக்களுக்கும் அடையாள ஆவணமாக விளங்கி வருகிறது. மேலும், வங்கி கணக்கு தொடங்கவும், பான் கார்டு பெறவும், பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்கள் போன்ற இடங்களிலும், பிற வேலைகளுக்கும் ஆதார் எண் அவசியமாக உள்ளது. இத்தகைய முக்கிய ஆவணமாக விளங்கும் ஆதாரை நாம் தேவையான விவர மாற்றங்களை செய்து அப்டேட்டாக வைத்திருக்க வேண்டும். ஆதாருக்கு அடுத்தபடியாக பான் கார்டும் அவசியமானதாகும். அதாவது, வருமான வரி, பணப் பரிவர்த்தனை, வங்கி சார்ந்த அனைத்து வேலைகளுக்கும் பான் கார்டு முக்கியம்.
Exams Daily Mobile App Download
மேலும் வருமான வரி செலுத்துவதற்கும், வரிக் கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு பான் கார்டு அவசியம் தேவைப்படும். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள என்எஸ்டிஎல் அமைப்பு இந்த பான் எண்னை வழங்குகிறது. இதனை அடுத்து, ஆதார் மற்றும் பான் கார்டை இணைக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, முன்னதாக ஜூன் 30ம் தேதிக்குள் ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்க கால அவகாசமும் வழங்கப்பட்டது. இந்நிலையில், வழங்கப்பட்ட காலக்கெடு இன்னும் 2 நாட்களில் முடிவடைய உள்ளது. அதனால் விரைந்து இந்த வேலையை முடிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், குறிப்பிட்ட அவகாசத்திற்குள் இப்பணியை முடிக்கவில்லையெனில் பான் கார்டு செயலிழந்துவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் ஜூலை 11 உள்ளூர் விடுமுறை – பள்ளிகள் & கல்லூரிகள் மூடல்!
மேலும் வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் ஆதாருடன் பான் எண்ணை இணைக்காவிட்டால் அவர்கள் வங்கி சேவையை தொடர்ந்து பெறுவதில் சிக்கல் ஏற்படும். அத்துடன் 1000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஆதாருடன் பான் எண்ணை இணைக்காதவர்கள் வருமான வரித் துறையின் https://www.incometaxindiaefiling.gov.in/home என்ற இணையதளத்தில் சுலபமாக இரண்டையும் இணைத்துவிடலாம். இதற்கு ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் கட்டாயம். அல்லது SMS வாயிலாகவும் பான் – ஆதார் எண்ணை இணைக்கலாம்.