‘ராஜா ராணி 2’ சீரியலில் இனி சந்தியாவாக ‘செம்பருத்தி’ ஷபானா – ரசிகர்கள் அதிர்ச்சி!
விஜய் டிவியின் ரேட்டிங்கில் முன்னணியில் உள்ள ‘ராஜா ராணி 2’ சீரியலில் நடக்க உள்ள புதிய மாற்றம் குறித்த ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
புதிய ப்ரோமோ:
ஒவ்வொரு சீரியலிலும் வெவ்வேறு கதையம்சம் காரணமாக தான் மக்கள் மத்தியில் அதிக புகழை அடைகிறது. இதனால் கதையின் அமைப்பின் படி நடிக்க உள்ள நடிகர், நடிகைளை தேர்வு செய்கின்றனர். ஆரம்பத்தில் நடிக்க தொடங்கும் நடிகை, நடிகர்கள் ஒரு சில காரணங்களால் நடுவில் மாற்றப்படுகின்றனர். இதனால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தாலும் கதையின் சுவாரஸ்யத்தால் தொடர்ந்து பார்த்து வருகின்றனர். இதற்கு ஏற்றார் போல் கதையிலும் மாற்றங்கள் செய்யப்படுகின்றது.
‘ராஜா ராணி 2’ சீரியல் இயக்குனருக்கு பதிலடி கொடுத்த ஆல்யாவின் கணவர் – நெட்டிசன்கள் கருத்து!
தற்போது விஜய் டிவியின் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் ‘ராஜா ராணி 2’ சீரியலில் ஆல்யா மற்றும் சித்து இருவரும் ஜோடியாக நடித்து வருகின்றனர். கூட்டு குடும்ப கதையான இந்த சீரியலில் அதிக கதாபாத்திரங்கள் உள்ளது. இந்த சீரியலின் நாயகி ஆல்யா தற்போது 2ம் முறையாக கர்ப்பமாக இருக்கிறார். இதனால் இவர் சீரியலில் இருந்து விலகுவதாக பல தகவல்கள் வெளி வந்தது. ஆனால் இந்த தகவலை ஆல்யா தரப்பில் இருந்து மறுத்து வந்தனர்.
‘பாக்கியலட்சமி’ சீரியல் பாக்கியா சுசித்ராவுக்கு ஒரு நாள் சம்பளம் இவ்வளவா? ரசிகர்கள் ஷாக்!
இயக்குனர் தரப்பில் இருந்தும் ஆல்யா தான் தொடர்ந்து நடிப்பார் என்று கூறி வந்தனர். ஆனால் தற்போது சமூக வலைத்தளங்களில் புதிய ப்ரோமோ ஒன்று ‘ராஜா ராணி 2’ சீரியலுக்கு வெளியிடப்பட்டுள்ளது. அதில், சந்தியாவாக ஆல்யாவிற்கு பதில் ‘செம்பருத்தி’ ஷபானா தான் நடிக்க இருப்பதாகவும், புதிய பல மாற்றங்களுடன் வர இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.