‘ராஜா ராணி 2’ சீரியல் இயக்குனருக்கு பதிலடி கொடுத்த ஆல்யாவின் கணவர் – நெட்டிசன்கள் கருத்து!
விஜய் டிவியின் பிரபல இயக்குனர் பிரவீன் தனது இன்ஸ்டா பதிவில் வெளியிட்டிருந்த பதிவு ஒன்று பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அதற்கு ஆல்யாவின் கணவர் சஞ்சீவ் இன்ஸ்டா மூலம் பதில் அளித்துள்ளார்.
இயக்குனரின் புலம்பல்:
விஜய் டிவியின் சீரியல்கள் என்றாலே பலருக்கும் ஃபேவரிட் பட்டியலில் உள்ளது. அனைத்து சீரியல்களும் மிகவும் நல்ல கதையம்சம் மற்றும் திருப்பங்களுடன் ஹிட் ஆக ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும் விஜய் டிவியின் ஆஸ்தான இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கும் தொடர்கள் என்றாலே அவை மெகா ஹிட் என்பது உறுதியாகிவிடும். இயக்குனர் இதுவரை பல வருடங்களுக்கும் மேலாக விஜய் டிவியில் சூப்பர் ஹிட் சீரியல்கள் பலவற்றையும் இயக்கி வருகிறார். பொதுவாக சீரியல்களில் கதாநாயகிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை? முதல்வர் ஆலோசனை!
ஆனால் பிரவீன் இயக்கும் அனைத்து தொடரிலும் கதையின் நாயகன், நாயகி என்று அனைவருக்குமே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் வகையில் கதை இருக்கும். தற்போது ஒரே நேரத்தில் நம்ம வீட்டு பொண்ணு, ராஜா ராணி 2, பாரதி கண்ணம்மா என்று 3 தொடர்களை இயக்கி வருகிறார். இயக்குநர் பிரவீன் சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் தான் ராஜா ராணி 2 ஷூட்டிங்கில் இருப்பதாகவும், யாரும் இன்னும் வராததால் போர் அடிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். அதற்கு ரசிகர்கள் பலரும் இவர் ஆல்யாவை தான் குறிப்பிடுகிறார் என்று கருத்து தெரிவித்து வந்தனர்.
ஆல்யா தற்போது கர்ப்பமாக இருப்பதால் அவர் ஷூட்டிங்கிற்கு லேட் ஆக வருவதால் தான் இயக்குனர் இவ்வாறு பதிவிட்டுள்ளார் என்று கூறிவந்தனர். இந்த பதிவிற்கு ஆல்யாவின் கணவர் சஞ்சீவ் ஆல்யா எப்போதுமே ஷூட்டிங்கிற்கு தாமதமாக சென்றதில்லை என்றும், இயங்குனர் யாரை குறிப்பிட்டுள்ளார் என்று தெரியவில்லை என்றும் பதில் அளித்துள்ளார். இவரின் பதிவை பார்த்த ரசிகர்கள் மனைவியை விட்டுக் கொடுக்காமல் இவர் அளித்துள்ள பதில் குறித்து பாராட்டியுள்ளனர்.