தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை? முதல்வர் ஆலோசனை!
தமிழகத்தில் அதிகரித்து ஓமைக்ரான் பரவல் காரணமாக 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டது. மேலும் தற்போது 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு எவ்வாறு வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்பது குறித்து முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஓமைக்ரான் அச்சுறுத்தல்
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கொரோனா பரவலின் 2ம் அலையின் தாக்கம் குறைந்ததை அடுத்து தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் அனைத்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டது. அத்துடன் கடந்த நவம்பர் மாதம் தொடக்க பள்ளிகளும் திறக்கப்பட்டது. மேலும் காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், மாணவர்களுக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை கொண்டாட அரையாண்டு விடுமுறை அளிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் அமைப்பு அரசிடம் கோரிக்கை வைத்தனர்.
மாநிலம் முழுவதும் வார இறுதி ஊரடங்கு உத்தரவு அமல்? இன்று முக்கிய அறிவிப்பு வெளியீடு!
இதையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறையாக 9 நாட்கள் வழங்கப்பட்டது. அடுத்ததாக ஜனவரி 3ம் தேதி பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என்று அறிவித்திருந்தது. தற்போது ஓமைக்ரான் பரவல் காரணமாக 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 10ம் தேதி வரை நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டது. இதுவரை தமிழகத்தில் 121 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் கொரோனா பாதிப்பும் அதிகரித்து கொண்டே வருகிறது.
Post Office தினசரி ரூ.50 சேமித்தால் ரூ.35.60 லட்சம் வரை ரிட்டன்ஸ் – அதிக லாபம் தரும் திட்டம்!
தற்போது தொற்று எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்பு ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளதால் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த ஆலோசனை செய்து வருவதாகவும் அத்துடன் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் ரத்து செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து தமிழக முதல்வர் இன்று ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. அதனால் விரைவில் இது குறித்த அறிவிப்புகள் வெளியாகும். மேலும் டெல்லி, பஞ்சாப், மேற்கு வங்காளம், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் ஓமைக்ரான் பரவலை தடுக்க பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது