மாநிலம் முழுவதும் வார இறுதி ஊரடங்கு உத்தரவு அமல்? இன்று முக்கிய அறிவிப்பு வெளியீடு!
உத்தரப்பிரதேசத்தில் கொரோனா பேரலைக்கு எதிராக புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து அரசு ஆலோசித்து வரும் நிலையில், அம்மாநிலத்தில் வார இறுதி ஊரடங்கு மற்றும் பொது இடங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு
தற்போது அதிகரித்து வரும் ஒமிக்ரான் மற்றும் கொரோனா வைரஸ் வழக்குகளுக்கு மத்தியில், நோய்த்தொற்று மேலும் பரவுவதைத் தடுக்க வார இறுதி ஊரடங்கு உள்ளிட்ட சில கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க உத்தரபிரதேச அரசு திட்டமிட்டுள்ளது. இது சம்பந்தமாக, முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு இன்று (ஜன.4) மாலை 6.30 மணியளவில் கொரோனா தடுப்பு குழு உறுப்பினர்கள் மற்றும் சுகாதார ஆலோசனைக் குழுவுடன் ஒரு முக்கிய ஆலோசனை கூட்டத்தை நடத்த இருக்கிறது.
Post Office தினசரி ரூ.50 சேமித்தால் ரூ.35.60 லட்சம் வரை ரிட்டன்ஸ் – அதிக லாபம் தரும் திட்டம்!
இந்த கூட்டத்தில் திரையரங்குகள், மால்கள், நீச்சல் குளங்கள் மற்றும் இது போன்ற பிற பொது இடங்களுக்கு தடை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது தொடர்பான அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் வார இறுதி ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது. ஏற்கனவே இம்மாநிலத்தில் தினசரி இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. மேலும் திருமணங்களில் 200க்கும் மேற்பட்ட மக்கள் கூடுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான DA உயர்வு நிறுத்திவைப்பு? ஓமைக்ரான் பரவல் எதிரொலி!
இதற்கிடையில் நேற்று (ஜன.3) ஒரு நாளில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 572 கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவாகியுள்ளது. எனினும், உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இது குறித்து உத்தரப்பிரதேச மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் அமித் மோகன் பிரசாத், தொற்று விகிதம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் ஜன.2ம் தேதியன்று 0.4 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாக காணப்படுவதாகவும், மக்கள் வீட்டிலேயே குணமடைந்து வருவதாகவும் அவர் திருப்தி தெரிவித்துள்ளார்.