எய்ம்ஸ் மருத்துவர்களுக்கான குளிர்கால விடுமுறை ரத்து – அதிகரிக்கும் ஓமிக்ரான் & கொரோனா பாதிப்பு!
இந்தியாவில் தலைநகர் டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரித்தும் வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை காரணமாக எய்ம்ஸ் மருத்துவர்களுக்கான குளிர்கால விடுமுறையை ரத்து செய்வதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
குளிர்கால விடுமுறை:
உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் முழுமையாக குறையாத நிலையில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து ஓமிக்ரான் என்ற புதிய வகை வைரஸ் தொற்று மீண்டும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே கொரோனா வைரஸில் இருந்து உருமாற்றம் அடைந்த டெல்டா பிளஸ் வைரஸ் எதிர்பார்த்த அளவு மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியது. இதனை கட்டுப்படுத்த உலக நாடுகளே திணறியது. இதனை தடுக்கும் பணியாக தடுப்பூசி செலுத்துதல், ஊரடங்கு அம்பலப்படுத்துதல் தனிமனித இடைவெளி, முக கவசம் அணிதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளால் தொற்றை கட்டுக்குள் நாட்டு அரசுகள் தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்தது. இதனால் மக்கள் மீண்டும் தங்களது இயல்பு வாழ்க்கையை நோக்கி சென்றனர்.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – பொங்கல் பரிசு 2022 வழங்கல்!
இந்த நேரத்தில் அடுத்த தாக்குதலாக ஓமிக்ரன் தொற்று வேகமெடுத்து வருகிறது. இந்த வைரஸ் டெல்ட்டாவை போல கொரோனா வைரஸில் இருந்து உருமாற்றம் அடைந்த வைரஸ். டெல்ட்டாவை போலவே அதிக வீரியதுடன் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போது வரை 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த ஓமிக்ரான்தொற்று பரவியுள்ளது. மற்ற நாடுகளை தொடர்ந்து அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் ஓமிக்ரான் ஊடுருவி உள்ளது. முதன் முதலில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த ஓமிக்ரான் அங்கிருந்து இந்தியா வந்தவர்களின் மூலமாக பரவியது.
தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை? முதல்வர் ஆலோசனை!
இதனால் இந்தியா முழுவதும் 1500 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் பல மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அதே போல் டெல்லியிலும் கடும் கட்டுப்பாடுகளை மேட்டரும் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. டெல்லியில் ஓமிக்ரான் மற்றும் கொரோனா இரண்டும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. இந்த நிலையில் நடப்பாண்டு எய்ம்ஸ் மருத்துவர்களுக்கு ஜனவரி 5 முதல் 10ம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருந்த குளிர்கால விடுமுறையை ரத்து செய்வதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் அனைத்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப அரசு உத்தரவிட்டுள்ளது.