தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – பொங்கல் பரிசு 2022 வழங்கல்!
தமிழகத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு பொங்கல் வைக்க தேவையான பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி இன்று தொடங்கியுள்ளது. இந்நிலையில் பொங்கல் தொகுப்பை வாங்கிகொண்டவர்கள் மன மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பொங்கல் தொகுப்பு:
தமிழகத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பொங்கல் பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் கடந்த ஆட்சியில் பொங்கல் வைக்க தேவையான பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த ஆண்டும் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்க தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? தகவல் வெளியீடு!
அதன்படி பொங்கல் வைக்க தேவையான பச்சரிசி, முந்திரி, திராட்சை, வெல்லம் உள்ளிட்ட பொருட்களுடன் முழு கரும்பு மற்றும் சில மளிகை பொருட்களும் சேர்த்து மொத்தம் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இந்த பொங்கல் தொகுப்பு தமிழகத்தில் உள்ள 2.15 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பொங்கல் தொகுப்பு கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு முறையே வழங்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
TNPSC குரூப் 2 தேர்வர்கள் கவனத்திற்கு – பாடத்திட்டம், கல்வித்தகுதி, தேர்வு முறை & முழு விபரம் இதோ!
அதாவது பொங்கல் தொகுப்பு வழங்க அனைவரும் அவரவர் வீட்டிற்கு நேரடியாக சென்று டோக்கன் வழங்கப்பட்டு அந்த டோக்கன் அடிப்படையில் வரிசையாக பொங்கல் தொகுப்பு வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியானது இன்று தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட நிலையில் அனைத்து பகுதிகளிலும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் குமாரி மாவட்டத்தில் மட்டும் 5 லட்சத்து 63 ஆயிரத்து 937 பேருக்கு பொங்கல் தொகுப்பு வாங்கப்பட உள்ளது. அதன்படி இன்று பொங்கல் பொங்கல் தொகுப்பு தொகுப்பு வாங்கிகொண்டவர்கள் மன மகிழ்ச்சியுடன் வீடு திரும்பியுள்ளனர்.