தமிழகத்தில் நாளை (ஜன.5) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் நாளை (ஜன.5) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (ஜன.5) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (ஜன.5) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

தமிழகத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படுகிறது. இதனை தொடர்ந்து சின்னமனூர் அருகே மாா்க்கையன்கோட்டை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (ஜன.5) மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின்தடை அறிவிப்பு

தமிழகத்தில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதால் மின்தடை அறிவிப்பை மின்வாரியம் அறிவித்து வருகிறது. இதனால் மின் கசிவு காரணமாகவும் மின் இணைப்பு கம்பிகளில் ஏற்படும் மின் பிளவு காரணமாகவும் ஏற்படும் மின் விபத்துகள் குறைகிறது. ஆதலால் தமிழக அரசு மாதந்தோறும் மின்தடையை பல்வேறு பகுதிகளில் அறிவித்து வருகிறது. இந்த மின்தடையின் போது மின் கம்பங்களில் உள்ள பழுதுகள், மின் இணைப்பு கம்பிகளில் உள்ள பிளவுகள் உள்ளிட்ட அனைத்து மின் பராமரிப்பு பணிகள் சரி பார்க்கப்படுகிறது.

எய்ம்ஸ் மருத்துவர்களுக்கான குளிர்கால விடுமுறை ரத்து – அதிகரிக்கும் ஓமிக்ரான் & கொரோனா பாதிப்பு!

இதனை தொடர்ந்து நாளை சின்னமனூர் அருகே மார்க்கையன்கோட்டை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (ஜன.5) மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. அத்துடன் இதில் மின்சாரம் பெறும் பகுதிகளுக்கு நாளை காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் இருக்காது என்றும் தெரிவித்துள்ளது. அத்துடன் மின்பராமரிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு பணிகள் முடிந்தவுடன் இந்த துணை மின் நிலையத்தில் மின் விநியோகிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது

தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? தகவல் வெளியீடு!

மேலும் மார்க்கையன்கோட்டை துணை மின் நிலையத்தின் மூலமாக மின்சாரம் பெற்று பயன்பெறும் பகுதிகளான அய்யம்பட்டி, புலிக்குத்தி , கீழச்சிந்தலைச்சேரி, மேலசிந்தலைச்சேரி, பல்லவராயன்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை புதன்கிழமை அன்று காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என்று சின்னமனூர் மின்பகிா்மான செயற்பொறியாளர் ரமேஷ்குமார் அவர்கள் அறிவிப்பை தெரிவித்துள்ளார். அதனால் மின் பராமரிப்பு பணிகள் முடியும் வரை பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!