செப்டம்பர் 5 ஆம் தேதி நீட் தேர்வு 2021? வைரலாகும் செய்தி!!
2021 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது செப்டம்பர் 5 ஆம் தேதி நேரடியாக நடத்தப்படும் என்று தற்போது சமூகவலைத்தளங்களில் செய்திகள் வேகமாக பரவி வருகின்றது.
நீட் தேர்வு:
தேசிய தேர்வு முகமை சார்பில் ஆண்டுதோறும் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் எனப்படும் தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே நாடு முழுவதும் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை வழங்கப்படும்.
மத்திய அரசு பணிகளுக்கு பொதுத்தேர்வு மூலம் ஆட்சேர்ப்பு – 2022 முதல் துவக்கம்!
ஒவ்வொரு ஆண்டும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவடைந்தவுடன் மே மாத இறுதியில் இந்த தேர்வு நடத்தப்படும். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக இந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு ஆகஸ்ட் மாதம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அது குறித்து அரசு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்தப்பட்டதால் சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.
இன்று முதல் 7 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல் – அசாம் அரசு அறிவிப்பு!
அதனால் மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் தயாரிப்பதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்த அறிவிப்பை விரைவாக வெளியிட வேண்டும் என மாணவர்கள், பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர். இப்படியாக இருக்க, வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி நீட் தேர்வுகள் நடைபெறும் என்று சமூகவலைத்தளங்களில் செய்திகள் வைரலாக பரவி வருகின்றது.