JEE (மெயின்ஸ்) 3 & 4ம் கட்ட தேர்வு தேதி 2021 – மத்திய கல்வி அமைச்சர் வெளியீடு!
மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், 2021ம் ஆண்டின் தள்ளிவைக்கப்பட்டுள்ள 3மற்றும் 4ம் கட்ட ஜேஇஇ தேர்வுகள் நடக்கும் தேதி மற்றும் தேர்வின் போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளையும் வெளியிட்டுள்ளார்.
ஜேஇஇ தேர்வுகள்:
மத்திய அரசின் உயர்நிலை பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதற்கு அரசால் நடத்தப்படுவது தான் ஜேஇஇ தேர்வாகும். ஆண்டு தோறும் இதன் மதிப்பெண்களின் அடிப்படையில் தான் மாணவர்கள் மத்திய அரசின் பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கப்படுகிறார்கள். வழக்கமாக ஆண்டிற்கு இரண்டு முறை நடக்கும் இந்த தேர்வானது நடப்பு ஆண்டில் இருந்து நான்கு முறை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு பணிகளுக்கு பொதுத்தேர்வு மூலம் ஆட்சேர்ப்பு – 2022 முதல் துவக்கம்!
அதன்படி, முதல் கட்டமாக பிப்ரவரி 23 முதல் 26 வரையிலும், இரண்டாம் கட்ட தேர்வுகள் மார்ச் 15 முதல் 18 வரையிலும், 3ம் கட்ட ஏப்ரல் 27 முதல் 30 வரையிலும், 4ம் கட்ட மே 24 முதல் 28 வரையிலும் நடத்த திட்டமிடப்பட்டது. பிப்ரவரி மற்றும் மார்ச் மாத தேர்வுகள் குறிப்பிட்ட தேதிகளில் நடந்து முடிந்து விட்ட நிலையில், ஏப்ரல் மற்றும் மே மாத தேர்வுகள் கொரோனா தொற்று காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. தேசிய தேர்வுகள் ஆணையம் நாட்டில் கொரோனா நிலைமையை மறு ஆய்வு செய்த பின்னர் மீதமுள்ள தேர்வுகளை நடத்துவதற்கு முடிவு செய்தது.
செப்டம்பர் 5 ஆம் தேதி நீட் தேர்வு 2021 – என்டிஏ அறிவிப்பு!
அதன்படி, மத்திய கல்வி அமைச்சர், தேசிய தேர்வுகள் ஆணையத்தின் ஜேஇஇ 3 மற்றும் 4ம் கட்ட தேர்வுகள் முறையே ஜூலை 20 முதல் 25 வரையும், ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2ம் தேதி வரையும் நடத்த இருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், தேர்வின் போது கடைபிடிக்க பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் விண்ணப்ப விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ தகவகல்களை மாணவர்கள் தேசிய தேர்வு ஆணையத்தின் இணையத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.