மத்திய அரசு பணிகளுக்கு பொதுத்தேர்வு மூலம் ஆட்சேர்ப்பு – 2022 முதல் துவக்கம்!
மத்திய அரசு பணிகளுக்கு வரும் 2022 ஆம் ஆண்டு துவக்கம் முதல் பொது தகுதித்தேர்வு நடத்தப்பட்டு ஆட்சேர்ப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
அரசு பணிகள்:
கொரோனா பேரலை காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அரசு, தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் பல மூடப்பட்டுள்ளது. இதனால் பல தொழில்கள் மற்றும் நிறுவனங்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில், பல துறைகளில் புதிய பணி நியமனம் செய்யப்படவில்லை. அதாவது கொரோனா பேரலையால் அரசு பணிக்கான தேர்வாளர்களை தேர்வு செய்வதற்காக தேர்வுகளை நடத்த முடியவில்லை.
சமூக வலைதள பயனர்கள் கவனத்திற்கு – தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை!
அதன் காரணமாக மத்திய மற்றும் மாநில அரசு துறைகளிலும் காலியாக உள்ள இடங்களுக்கு, புதிய நியமனம் செய்வது உள்ளிட்ட பல செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா 2 ஆம் அலை தொற்று குறைந்து வரும் சூழலில், மாநிலங்கள் தோறும் விதிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து படிப்படியாக தற்போது தளர்வுகள் கொடுக்கப்பட்டு வருகிறது.
இன்று முதல் 7 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல் – அசாம் அரசு அறிவிப்பு!
அந்த வகையில் பயிற்சி வகுப்புகளை துவங்குவதற்கும், பொதுத்தேர்வுகளை நடத்திக்கொள்வதற்கும் மாநில அரசு அனுமதி கொடுத்துள்ளது. இந்நிலையில் அரசுத் துறைகளில் புதிய ஆட்சேர்ப்பு பணிகளை மீண்டுமாக நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன் படி வரும் 2022 ஆம் ஆண்டு துவக்கத்தில் இருந்து நாடு முழுவதும், மத்திய அரசு பணிகளுக்கான பொது தகுதித்தேர்வுகள் நடத்தப்படும் என மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.