இன்று முதல் 7 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல் – அசாம் அரசு அறிவிப்பு!
கொரோனா நோய்த்தொற்று நிலவரத்தை கருத்தில் கொண்டு அசாம் மாநிலத்தில் உள்ள 7 மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் இன்று முதல் (ஜூலை 7) அமலுக்கு வருகிறது.
முழு ஊரடங்கு:
நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் 2வது அலை மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசுகள் சார்பில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்படுகிறது. இந்நிலையில் அசாம் மாநில அரசு கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் கோல்பாரா, கோலாகாட், ஜோர்ஹாட், லக்கிம்பூர், சோனித்பூர், பிஸ்வநாத் மற்றும் மோரிகான் ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு இன்று முதல் அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ளது. இந்த இடங்களில் கடைகள் மூடப்படும். பொது மற்றும் தனியார் போக்குவரத்து இயக்க அனுமதிக்கப்படாது, மாநிலங்களுக்கு இடையேயான இயக்கமும் நிறுத்தி வைக்கப்படுகிறது.
கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றாவிட்டால் தளர்வுகள் வாபஸ் – மத்திய அரசு!
அனைத்து பணியிடங்கள், வணிக மற்றும் வணிக நிறுவனங்கள், மளிகை பொருட்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள், பால் சாவடிகள், விலங்கு தீவனம், உணவகங்கள், சாலையோர உணவகங்கள் மற்றும் பிற உணவகங்கள், விற்பனை கவுண்டர்கள், ஷோரூம்கள் போன்றவை அதிக பாதிப்புள்ள மாவட்டங்களில் மூடப்படும். மிதமான பாதிப்பு உள்ள மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரையும், தொற்று குறைந்து வரும் மாவட்டங்களில் மாலை 4 மணி வரையிலும் திறந்திருக்க அனுமதிக்கப்படும்.
பான் கார்டு தொலைந்து விட்டால் மீண்டும் பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள்!
மொத்த கட்டுப்பாட்டு மாவட்டங்களில் அனைத்து பொது மற்றும் தனியார் போக்குவரத்திற்கு அசாம் அரசு தடை விதித்துள்ளது. மேலும் உத்தரவின் படி, அனைத்து மாவட்டங்களுக்கிடையிலான பயணிகள் போக்குவரத்து சேவைகள் மற்றும் பிற மாவட்டங்களுக்கு மக்கள் செல்வதற்கு அனுமதி இல்லை. அனைத்து பொது இடங்களிலும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.