முடிவை நோக்கி பயணிக்கும் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீசன் 2 – விரைவில் சீசன் 3 அறிமுகம்!
விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடர் கூடிய விரைவில் நிறைவடைய போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுமட்டுமல்லாமல் சீசன் 3 அறிமுகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நாம் இருவர் நமக்கு இருவர்:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள், நிகழ்ச்சிகள் என அனைத்துமே மக்களின் மனதில் நல்ல ஒரு இடத்தைப் பிடித்து வருகிறது. அந்த வகையில் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2 தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. அன்றாடம் ஒவ்வொரு வீட்டிலும் நடைபெறும் பிரச்சனைகளை விஜய் தொலைக்காட்சி சீரியல்கள் அனைத்தும் அப்படியே படம் போட்டு காட்டி கொண்டிருப்பதால் ஏராளமான மக்கள் இந்த சீரியல்களை ரசித்து பார்த்து வருகின்றனர்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தொடக்க கல்வி இயக்குனரின் செயல்முறைகள்!
நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 1 தொடர் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால், ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி சீசன் 2 தொடர் ஒளிபரப்பப்பட்டது. சீசன் 1 அளவுக்கு சீசன் 2 மக்களின் மத்தியில் வரவேற்பை கொடுக்கவில்லை. டிஆர்பியிலும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடர் பின்தங்கி தான் இருந்து வருகிறது. இடையிலேயே கத்தி கதாபாத்திரத்தில் நடித்து வந்த ராஜு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சீரியலில் இருந்து விலகினார்.
Exams Daily Mobile App Download
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் மீண்டும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் இணைந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. கத்தி கதாபாத்திரம் சீரியலில் மீண்டும் என்ட்ரி கொடுத்தால் கூட நாம் இருவர் நமக்கு இருவர் தொடர் விறுவிறுப்பாக செல்லும். இந்நிலையில், நாம் இருவர் நமக்கு இருவர் தொடர் இன்னும் ஒரு மாதத்திற்குள் நிறைவடைய போகிறது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு பிறகு சீசன் 3 ஒளிபரப்ப இருப்பதாகவும் கூறப்படுகிறது.