கோபியை பற்றிய அனைத்து உண்மைகளையும் பாக்கியாவிடம் சொல்லி விட்ட மூர்த்தி – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
கோபி பாக்கியா மற்றும் ராதிகாவை ஏமாற்றி இரட்டை வேஷம் போட்டு வருவது மூர்த்தி மற்றும் தனத்திற்கு தெரிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதை பற்றி குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தெரியவருவது போல் ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது.
கோபியின் நாடகம்:
பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் நாடகம் என்று தான் அனைவருக்கும் தெரியப் போகிறதோ என்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். இதனால் ஒவ்வொரு எபிசோடும் மிகவும் பரபரப்பாக சென்று வருகிறது. தற்போது ராமமூர்த்தி தாத்தாவின் 75வது பிறந்தநாளை அனைவரும் மிகவும் கொண்டாடினார்கள். அப்போது கோபி நடந்து கொண்டது அனைவருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்துவது போலவே இருந்தது.
Exams Daily Mobile App Download
மேலும் எழில் வேறு அப்பாவின் நடத்தையை பற்று கதிர் மற்றும் ஜீவாவிடம் சொல்லி அழுததும் சேர்ந்து கொண்டு கோபி மீது உள்ள சந்தேகத்தை அதிகப்படுத்தியது. இந்நிலையில் மூர்த்தி வெளியில் சென்றிருக்கும் போது ராதிகாவுடன் கோபி நெருக்கமாக பேசிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து விடுவார். இதை பற்றி தனத்திடம் சொல்லி அவர்கள் இருவரும் உண்மையை தெரிந்து கொள்வதற்காக ராதிகாவின் வீட்டிற்க்கு சென்று விசாரிப்பார்கள். அப்போது தான் கோபியின் சுயரூபம் தெரிய வரும்.
குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் திடீர் திருமணம்? ரசிகர்கள் ஷாக்!
இதை பற்றி கோபியிடம் விசாரிப்பதற்காக மூர்த்தி தனியாக ரூமிற்குள் அழைத்து செல்வார். அப்போது கோபியிடம் ராதிகா அனைத்து உண்மைகளையும் சொல்லி விட்டதாகவும், ஒழுங்காக அந்த பழக்கத்தை விட்டு விடுங்கள் என்றும் கோபியிடம் சொல்கிறார். ஆனால் கோபி இதை கேட்க நீ யார் என்று சொல்லவும், மூர்த்திக்கு கோவம் அதிகமாகி இருவரும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் இந்த விஷயத்தை பற்றி அனைவருக்கும் தெரிய வருகிறது.