படுத்த படுக்கையாகும் மூர்த்தி, கர்ப்பமான கதிர் மனைவி முல்லை – ப்ரோமோ ரிலீஸ்!
மூர்த்திக்கு நல்லபடியாக அறுவை சிகிச்சை முடிந்து வீட்டிற்கு அழைத்து செல்ல வேண்டும் என குடும்பத்தினர்கள் பரபரப்பாக இருக்கும் நிலையில் முல்லை கர்ப்பமாக இருப்பதை குடும்பத்தினரிடம் கூறுகிறார். மகிழ்ச்சி கூட அடைய முடியாமல் குடும்பத்தினர்கள் தவிக்கும் படியான புரோமோ வெளியாகியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மூர்த்தி குணமாகி வீட்டிற்கு வருவாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். முல்லையால் இயற்கையாக கருவுற முடியாது என்பதால் 5 லட்சம் வரைக்கும் செலவு செய்து செயற்கை முறை கருவுறுதல் சிகிச்சையை செய்தனர். இந்த சிகிச்சைக்கான செலவை வைத்து தற்போது வரைக்கும் குடும்பத்தினர்கள் சண்டை போட்டு கொண்டிருந்ததால் கதிரும் முல்லையும் கடுப்பாகி வீட்டை விட்டு சென்றனர்.
Exams Daily Mobile App Download
ஐந்து லட்ச ரூபாய் பணத்தை திருப்பி கொடுக்கும் வரைக்கும் வீட்டின் வாசற்படியை மிதிக்கவே மாட்டேன் என கதிர் சவால் விட்டு சென்றுவிட்டார். கதிரும் முல்லையும் வீட்டைவிட்டு சென்றதுமே மூர்த்திக்கு நெஞ்சுவலி வந்து விடுகிறது. அதாவது மூர்த்திக்கு இதயத்தில் 2-பிளாக் இருப்பதாகவும், உடனடியாக அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே பிழைக்க வைக்க முடியும் எனவும் மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்த சிகிச்சைக்கு தற்போதைக்கு இரண்டு லட்சத்தை கட்ட வேண்டும் என மருத்துவர்கள் கூறியதால் ஜனார்த்தனன் தான் 2 லட்ச ரூபாய் பணத்தை கட்டுகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் இரண்டாகப் பிரிந்ததற்கு முக்கியமான காரணம் ஜனார்த்தனன் தான். ஆனால், தற்போது வேறு வழி இல்லாத காரணத்தினால் ஜனார்த்தனனிடமிருந்து இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை குடும்பத்தினர்கள் வாங்கிக் கொள்கின்றனர். அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்து மூர்த்தி குணமாகி வீட்டிற்கு வருவாரா என எதிர்பார்த்த நேரத்தில் முல்லை கர்ப்பமாவது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது. முல்லை கற்பமான பிறகாவது முல்லையை அழைத்துக்கொண்டு கதிர் மூர்த்தியின் வீட்டிற்கு செல்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.