IPL 2022 லீக்: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஷாக் – முதல் ஆட்டத்தில் இருந்து விலகும் மொயீன் அலி?
இன்னும் ஒரு சில நாட்களில் துவங்க இருக்கும் IPL 2022 லீக் போட்டிகளின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி வீரர் மொயீன் அலி கலந்து கொள்ள வாய்ப்பில்லை என்ற ஷாக்கிங் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ்
இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் போட்டிகளில் நான்கு முறை சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரும் மார்ச் 26ம் தேதியன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள புதிய சீசனுக்கான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை எதிர்கொள்கிறது. ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் தீபக் சஹார் அணியில் இல்லாதது ஒரு பெரும் பின்னடடைவாக கருதப்படும் இந்த சூழலில், இப்போது CSK அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் மொயின் அலியின் சேவையை அவர்கள் இழக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
IPL 2022 CSK vs KKR: தொடக்க போட்டியில் கவனிக்க வேண்டிய 3 முக்கிய வீரர்களின் ஆட்டம்!
இது தொடர்பான ஊடக அறிக்கைகளின்படி, மொயீன் அலி இந்தியாவுக்கு வருவதற்கான விசாவை பெறுவதில் தாமதத்தை எதிர்கொள்வதாக கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் இங்கிலாந்தை சேர்ந்த ஆல்ரவுண்டர் மொயின் அலி ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்வதற்கான பயோ-பப்பிளில் நுழைவதற்கு முன் மூன்று நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தப்படுத்தலில் இருக்க வேண்டும். அதனால் அவர் இன்றைக்குள் மும்பைக்கு வந்து சேர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இப்போது மொயீன் அலி இந்தியாவுக்கு வரமுடியாத பட்சத்தில் அவருக்கு பதிலாக நியூசிலாந்தின் டெவோன் கான்வே தனது அறிமுக போட்டியில் களமிறங்குவார்.
அந்த வகையில் டெவோன் கான்வே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் CSK அணிக்கான ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக இருப்பார்கள். இதற்கிடையில் கடந்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இங்கிலாந்து வீரர் மொயீன் அலி, சில காலமாக சிறப்பான பார்மில் உள்ளார். கடந்த ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த ICC ஆண்கள் டி20 உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து அணியில் அவர் முக்கிய உறுப்பினராக இருந்தார். மேலும் IPL போட்டிகளிலும் அவருக்கு நல்ல அனுபவம் உண்டு. இதனால் இந்த ஆண்டு அவர் CSK அணியின் வெற்றிக்கு முக்கிய புள்ளியாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.