மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்ளப் போகும் முல்லை, காப்பாற்றுவாரா கதிர்? சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முல்லையும் மீனாவும் மருத்துவரை சந்தித்துள்ள நிலையில், முல்லைக்கு குழந்தை பிறக்காத விஷயம் தெரிய வந்துள்ளது. அதனால் அடுத்து என்ன முடிவு எடுக்க போகிறார் என்பது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை குழந்தை இல்லாமல் வருத்தப்பட மருத்துவமனைக்கு கதிரும் முல்லையும் செல்கின்றனர். அப்போது முல்லைக்கு கருக்குழாய் அடைப்பு இருப்பதாக டாக்டர் சொல்ல கதிர் அந்த உண்மையை முல்லையிடம் இருந்து மறைகிறார். அவரது தலையில் அடித்து சத்தியம் செய்ய முல்லையும் நம்பிவிடுகிறார். ஆனால் கதிர் அந்த மெடிக்கல் ரிப்போர்ட்டை பாதுகாப்பாய் வைக்க முல்லை அதை பார்த்து சந்தேகப்படுகிறார்.
முடிவுக்கு வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் – வெளியான இறுதி நாள் புகைப்படம் ! ரசிகர்கள் ஷாக்!
பீரோ சாவியை கொடுக்காமல் இருக்க முல்லைக்கு சந்தேகம் வருகிறது. மேலும் மருத்துவரை கதிர் மட்டும் தான் பார்த்ததால் மீண்டும் ஒரு முறை கேட்கலாம் என சொல்ல மீனாவின் உதவியை கேட்கிறார். மீனா சரி என சொல்ல இன்றைய எபிசோடில் மீனாவும் முல்லையும் தனத்திடம் பொய் சொல்லிவிட்டு மருத்துவரை சந்திக்க செல்கிறார்கள், அங்கே முல்லை பதட்டத்துடன் இருக்க மீனா தைரியம் சொல்கிறார். மருத்துவரிடம் முல்லை நடந்ததை சொல்ல, அவர் ரிப்போர்ட்டை வாங்கி பார்க்கிறார்.
அதில் முல்லைக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்பு குறைவாக இருப்பதாக இருக்கிறது. அவரது கருக்குழாயில் அடைப்பு இருப்பதாக சொல்ல, முல்லை உடைந்து போகிறார். ஆனால் இதை சரி செய்யலாம் என டாக்டர் சொல்ல அதை கேட்காமல் முல்லை அழுது கொண்டே வெளியே வருகிறார். ரோட்டில் அமர்ந்து அழ மீனா வீட்டிற்கு கூப்பிடுகிறார். ஆனால் முல்லை தனது அம்மாவை பார்க்க போவதாக சொல்கிறார். கதிர் முல்லையை தேடி வீட்டிற்கு வருகிறார். இந்நிலையில் நாளைய எபிசோடில் முல்லை மனம் உடைந்து தற்கொலை செய்யப் போவது போல காட்டப்பட்டுள்ளது. கதிர் முல்லையை காப்பாற்றுவாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.