தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – 2ம் கட்ட திருப்புதல் தேர்வுக்கான பணி மும்முரம்!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் இரண்டாம் திருப்புதல் தேர்வு மார்ச் 28 முதல் ஏப்.5 ம் தேதி நடக்க உள்ளது. இந்த தேர்வுக்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.
2ம் கட்ட திருப்புதல் தேர்வு:
தமிழகத்தில் கொரோனா 3 வது அலை தாக்கத்திற்கு பிறகு பிப்ரவரி 1 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. கொரோனா காலகட்டத்தில் ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டதால் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படவில்லை. அதனால் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது. இந்த திருப்புதல் தேர்வு மூலம் மாணவ மாணவிகள் பொது தேர்வுக்கு சிறப்பாக தயார் ஆவதற்கு உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. கடந்த மாதம், முதல் திருப்புதல் தேர்வு நடைபெற்று முடிந்துவிட்டது. அடுத்து 2ம் கட்ட திருப்புதல் தேர்வு அரசு, தனியார் பள்ளிகளுக்கு ஒரே நாளில் பொதுத்தேர்வு போன்றே திருப்புதல் தேர்வும் நடக்க உள்ளது.
நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? ஒமிக்ரான் பரவல் அச்சம்!
இதற்காக ஒரே வினாத்தாள் வழங்கப்பட உள்ளன, மாணவர்களின் விடைத்தாள் வேறு பள்ளிகளில் திருத்தப்படுகிறது. அடுத்து 2ம் கட்ட திருப்புதல் தேர்வு திண்டுக்கல்லில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் வரும் மார்ச் 28 முதல் ஏப்.5ம் தேதி வரை நடக்க உள்ளது. மேலும் தேர்வுக்கு மாணவர்களை தயார் படுத்துதல் மற்றும் தேர்வு ஏற்பாடுகள் மும்முரமாக நடக்கிறது. இந்த 2ம் தேர்வு அன்று காலையில் நடக்கும் தேர்வுக்கு 8 மணிக்கும், மதியம் நடக்கும் தேர்வுக்கு காலை 11:30 மணிக்கும் வினாத்தாள்களை பெற்று செல்லும்படி பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர். ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் தேர்வு தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன் பொறுப்பான நபரை அதிகார அளிப்பு கடிதத்துடன் வினாத்தாள்களை பெற்றுச் செல்ல தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்துள்ளனர்.
மேலும் வினாத்தாள் காப்பீட்டு மையத்தில் இருந்து உரிய நபரிடம் ஒப்படைக்கப்படும் நேரம், சம்பந்தப்பட்டவர் பெற்ற நேரம் பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2ம் கட்ட திருப்புதல் தேர்வு வினாத்தாள்களில் சிறு தவறு ஏற்பட்டாலும் உரியவர்கள் மீது பள்ளிக் கல்விதுறை கடும் நடவடிக்கை எடுக்கும் என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. மேலும் தொழிற்கல்வி, 10 ம் வகுப்பு அறிவியல் பாடத்திற்கான செய்முறை தேர்வை அந்தந்த பள்ளிகள் அளவிலேயே தேதி நிர்ணயித்து நடத்திக் கொள்ள அறிவுறுத்தியுள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.