நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? ஒமிக்ரான் பரவல் அச்சம்!
தற்போது ஒமிக்ரான் வைரஸின் துணை மாறுபாடு வகையான BA.2 வைரஸ் அமெரிக்காவில் 35% புதிய பாதிப்புகளை பதிவு செய்திருப்பதால் அந்நாட்டில் மீண்டும் ஒரு முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவதற்கு சாத்தியம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முழு ஊரடங்கு
சமீப காலமாக உலக நாடுகளிடையே அச்சத்தை உண்டாக்கி இருக்கக்கூடிய கொரோனா வைரஸின் மாறுபாடான ஒமிக்ரான் வைரஸால் சீனா, கொரியா உள்ளிட்ட சில நாடுகள் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையில் இந்த ஒமிக்ரான் வைரஸ் எழுச்சியின் உச்சத்தில், ஒவ்வொரு நாளும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான புதிய தொற்றுநோய்கள் பதிவு செய்யப்பட்டு வருவதாக அமெரிக்கா தகவல் அளித்திருக்கிறது. அந்த வகையில் ஒமிக்ரான் மாறுபாட்டின் BA.2 வைரஸானது ஐக்கிய மாகாணங்களில் அதன் பிடியை படிப்படியாக அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல் – முதல்வரின் முடிவு என்ன?
இதனால் அமெரிக்காவில் மட்டும் புதிய கொரோனா நோய்த்தொற்றுகள் 35 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையங்கள் (சிடிசி) அளித்துள்ள தரவுகளின்படி, புதிய பாதிப்புகள் ஒரு வாரத்திற்கு முன்பு 22.3 சதவீதமாகவும், இரண்டு வாரங்களுக்கு முன்பு 15.8 சதவீதமாகவும் இருந்தன. ஆனால் இதற்கிடைப்பட்ட இரண்டு வாரங்களுக்குள் நோய்த்தொற்று விகிதம் இரட்டிப்பாகியுள்ளதாக தரவு தெரிவிக்கிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு? ஃபிட்மென்ட் காரணி அதிகரிப்பு! முழு விவரம் இதோ!
ஏற்கனவே அமெரிக்காவில் ஒமிக்ரான் வைரஸ் பெரும்பாலான நோய்த்தொற்றுகளை உருவாக்கி கொண்டிருக்கும் இந்த வேளையில் மார்ச் 19ம் தேதியில் அதன் பாதிப்பு 57.3 சதவீதமாக குறைந்துள்ளது. இதற்கிடையில், புதிய மாறுபாட்டின் காரணமாக மீண்டும் பாதிப்புகள் அதிகரித்தால், அமெரிக்கா லாக்டவுன்களை எதிர்கொள்ள நேரிடும் என்று பிரிட்டிஷ் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. அந்த வகையில் கட்டுப்பாடுகளை தளர்த்துவது, தடுப்பூசிகளிலிருந்து பாதுகாப்பு குறைந்து வருவது மற்றும் உலகம் முழுவதும் BA.2 துணை மாறுபாட்டின் எழுச்சி ஆகியவை அமெரிக்காவில் மற்றொரு அலையை கொண்டு வரக்கூடும் என்று கணிப்புகள் எழுந்திருக்கிறது.