சத்யா பற்றிய அனைத்து உண்மைகளையும் தெரிந்து கொண்ட ஸ்ருதி – பல திருப்பங்களுடன் மௌனராகம் 2!
பல நாட்களாகவே இவள் தான் சக்தியாக இருக்குமோ என சந்தேகத்தில் இருந்த ஸ்ருதிக்கு அனைத்து உண்மைகளும் தற்போது தெரிந்துவிட்டது. இந்நிலையில் சத்யாவையும் வருணையும் பிரித்தே தீருவேன் என ஸ்ருதி சத்யாவிடம் சபதம் போடுகிறார்.
மௌனராகம்:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் மௌனராகம் தொடர் மக்களால் அதிகமாக விரும்பி பார்க்கப்பட்டு வருகிறது. சிறு வயதில் இருந்தே தனக்கு போட்டியாக வளர்ந்து வரும் சக்தியை பார்த்து ஸ்ருதி பொறாமை கொள்கிறாள். பிறகு கார்த்திக் கிருஷ்ணாவிடம் சண்டை போட்டுவிட்டு மல்லிகாவும் சக்தியும் வேறு ஊருக்கு சென்று விடுகின்றனர். படித்து பெரியவள் ஆகி மீண்டும் கார்த்தி கிருஷ்ணா இருக்கும் இடத்திற்கே சக்தி வந்துவிடுகிறார். யாருக்கும் சந்தேகம் ஏற்பட்டுவிட கூடாது என்பதற்காக சத்யா என்கிற பெயரில் சென்னை வந்திருக்கிறார். வந்த இடத்தில் வருணுக்கும் சத்யாவிற்கும் திருமணமாகி விடுகிறது.
முடிவை நோக்கி பயணித்து கொண்டிருக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ – விரைவில் சீசன் 2 ஆரம்பம்!
தற்போதும் சத்யா பாடுவதை பார்த்து ஸ்ருதி பொறாமைபட்டு கொண்டிருக்கிறார். முதலில் சத்யாவை தருண் தான் காதலித்தார். அதற்கு பின்னர் தனது அண்ணன் வருணுக்காக தருண் சத்யாவை விட்டு கொடுப்பார். அனைத்து உண்மைகளையும் தெரிந்துகொண்ட ஸ்ருதி உண்மையை குடும்பத்தினரிடம் கூறி வருணையும் சத்யாவையும் பிரித்துவிடுவேன் என கூறி தருணை திருமணம் செய்து கொள்கிறாள். தற்போது மியூசிக் ஸ்கூல் ஒப்பனிங் அன்று, தருணை மிரட்டி அந்த ஸ்கூலை சத்யாவுக்கு தரவிடாமல் செய்தார்.
இதனால் மொத்த குடும்பமும் தருண் மீது கொலைவெறியில் இருக்கின்றனர். இந்நிலையில் சத்யா தான் மல்லிகாவின் மகள் என்பதை ஸ்ருதிக்கு தெரிந்துவிடுகிறது. எனது வாழ்க்கையை விட்டு நீ போகவே மாட்டாயா என ஸ்ருதி மனதிற்குள் புலம்புகிறாள். அதன் பின்னர் சத்யாவிடம் உன்னையும் வருணையும் பிரிக்காமல் விடவே மாட்டேன் என சபதம் போடுகிறார். நம்மை பற்றிய உண்மைகள் அனைத்தும் தெரிந்திருக்குமோ என சத்யாவும் யோசித்து கொண்டிருக்கிறார்.