தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரம் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு – அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரத்தை மூன்றாண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று அரசுக்கு தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தனியார் பள்ளிகள்:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த இரு வருடங்களாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் செயல்படாமல் ஆன்லைன் மூலமாகவே படித்து வந்தனர் மாணவர்கள். இந்நிலையில் சென்ற ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று சற்று குறைந்த நிலையில் தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் மற்றும் கல்லூரிகளும் திறக்கப் பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு 10, 11, 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகளுக்கான தேதிகளும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் (CPS) ரத்து – மார்ச் 22 இல் போராட்டம்!
இந்த நிலையில் தற்போது தமிழகத்தில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நர்சரி, பிரைமரி, மெட்ரிக், உயர்நிலை, மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் செயல்படுகின்றன. இவ்வாறு இருக்கும் நிலையில் தனியார் பள்ளி சங்கத்தின் சார்பில் ஒரு கோரிக்கை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இதனை ஒரு கடிதமாக தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்க மாநில பொது செயலாளர் நந்தகுமார் என்பவர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் இயக்குனர்களுக்கு அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில் தனியார் பள்ளிகள் சங்க மாநில பொது செயலாளர் நந்தகுமார் கூறியதாவது, தமிழகத்தில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளின் நிர்வாகத்தால், அரசுக்கு எந்தவித நிதி மற்றும் நிர்வாக சுமை கிடையாது. ஆனால், சொத்து வரி, நில வரி, நீர் வரி, தொழில் வரி உள்ளிட்ட பல்வேறு வகைகளில் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. தற்போது அரசின் வருவாயை குவிக்கும் வண்ணம் தனியார் பள்ளிகளின் அங்கீகாரம், பள்ளிக்கல்வித்துறை தரப்பில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்பட்டு வந்தது. தற்போது, ஆண்டுதோறும் அங்கீகாரம் பெற வேண்டும் என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த அங்கீகாரம் பெற ஆண்டு முழுவதும், பள்ளி கல்வியின் பல அலுவலகங்களுக்கு, பள்ளி நிர்வாகத்தினர் தினமும் அலைய வேண்டியுள்ளது. எனவே, முன்னர் இருந்தது போல, பள்ளிகளின் தொடர் அங்கீகாரத்தை மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்து வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.