சென்னை: கிடுகிடுவென உயரும் பெட்ரோல், டீசல் விலை – வாகன ஓட்டிகள் அவதி!
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலையானது நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து காணப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலை:
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையானது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆனாலும் நாடு முழுவதும் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுவதில்லை. ஒவ்வொரு மாநிலங்களிலும் பெட்ரோல், டீசல் விலையானது வேறுபட்டு காணப்படுகிறது. இந்த பெட்ரோல், டீசல் விலையை ஒவ்வொரு நாளும் இந்தியன் ஆயில் , ஹிந்துஸ்தான் மற்றும் பாரத் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றது. அந்த வகையில் நாளுக்கு நாள் பெட்ரோல் விலையானது அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறது. இவ்வாறு பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பதன் காரணம் நாளுக்கு நாள் அதன் தேவையும் அதிகரிப்பதனால் தான்.
ஜெனியை செழியனுடன் அனுப்ப மறுக்கும் ஜோசப்,கோவத்தில் ஈஸ்வரி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!
இந்நிலையில் நேற்றைய நிலவரப்படி சென்னையில் 1 லிட்டர் பெட்ரோல் விலையானது 103.92 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து 1 லிட்டர் டீசல் விலையானது 99.92 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. அவ்வாறு இருக்கையில் இன்று அக்-23 நிலவரப்படி சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 30 காசுகள் அதிகரித்து 1 லிட்டர் 104.22 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இத்தகைய விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது. நாடு முழுவதுமே பெட்ரோல் விலை அதிகரிப்பதை தொடர்ந்து, டீசல் விலையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
தமிழகத்தில் அரியர் தேர்வுகள் ரத்து அரசாணை அமல்? அரசு முக்கிய தகவல்! மாணவர்கள் ஷாக்!
அதன்படி இன்று டீசல் லிட்டருக்கு 33 காசுகள் உயர்ந்து 1 லிட்டர் 100.25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டீசல் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். இதிலிருந்து பெட்ரோலுக்கு நிகராக டீசலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது தெரிய வருகிறது. டீசல் பொதுவாக உற்பத்தி தொழில் நிறுவனங்களில் அதிகம் பயன்படுத்தப்படுவதால் தேவை அதிகரிக்கிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அதனால் இன்னும் டீசல் விலை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாக அறிவுறுத்தப்படுகிறது.