தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு, முழு ஊரடங்கு தளர்வுகளுடன் நீட்டிப்பு – முதல்வர் இன்று ஆலோசனை!
தமிழகத்தில் வரும் அக்டோபர் மாதம் 31ம் தேதியுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவடைய இருக்கும் நிலையில் இந்த கட்டுப்பாடுகளில் இருந்து கூடுதல் தளர்வுகளை அளிப்பது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் இன்று (அக்.23) முக்கிய ஆலோசனையில் ஈடுபட இருக்கிறார்.
ஊரடங்கு தளர்வுகள்
கடந்த மே மாதம் முதல் தமிழகம் முழுவதும் தீவிரமடைந்து வந்த கொரோனா 2ம் அலை பரவல் காரணமாக முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் வரும் அக்டோபர் 31ம் தேதி வரை சில தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகளை இன்னும் தளர்த்துவது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் இன்று (அக்.23) முக்கிய ஆலோசனையில் ஈடுபட இருக்கிறார்.
சென்னை: கிடுகிடுவென உயரும் பெட்ரோல், டீசல் விலை – வாகன ஓட்டிகள் அவதி!
அந்த வகையில் இன்று காலை 11 மணியளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் வைத்து நடைபெற இருக்கும் இந்த கூட்டத்தில் முதல்வருடன், தலைமை செயலர், மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், உயர் அதிகாரிகள் ஆகியோர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். இப்போது தமிழகத்தில் வரும் நவம்பர் 1ம் தேதியன்று 1 முதல் 8ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட இருக்கும் நிலையில் அதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அக்.23ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
குறிப்பாக தமிழகத்தில் தற்போது கொரோனா தினசரி பாதிப்பு ஆயிரத்தை நெருங்கி வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து மேலும் சில கூடுதல் தளர்வுகளை அளிப்பது மற்றும் வரவிருக்கும் தீபாவளி பண்டிகை கால கொண்டாட்டங்களை கருத்தில் கொண்டும் முக்கிய ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது. இதில் ஏற்கனவே வார இறுதி நாட்களில் மத வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதித்துள்ள அரசு அரசியல், சமுதாய மற்றும் கலாசார நிகழ்வுகள் நடத்துவதற்கும் தளர்வுகளை அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.