தமிழகத்திற்கு கூடுதல் ஆக்சிஜன் ஒதுக்கீடு – மத்திய அரசு உத்தரவு!!
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க கூடுதலாக 900 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
ஆக்சிஜன் ஒதுக்கீடு:
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமாகி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 34 ஆயிரத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரி கொரோனா பரவல் 30 ஆயிரத்தை தாண்டியுள்ளதால் மருத்துவமனைகளில் போதிய இடவசதி இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறையும் ஏற்படுகிறது.
தமிழகத்தில் முழு ஊரடங்கு நீட்டிப்பு? முதல்வர் ஆலோசனை!!
பலர் இந்த ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக இறந்துள்ளனர். இதனால் தமிழக அரசு தரப்பில் ஆக்சிஜன் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி தற்போது தமிழகத்திற்கு 900 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதுகு றித்த அறிவிப்பை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வெளியிட்டுள்ளார், இன்னும் 5 நாட்களுக்கு தமிழகத்திற்கு தேவையான 900 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கூடுதலாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் தமிழகத்தில் ஆக்சிஜன் விநியோகத்தை கவனிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி தாரேஸ் தலைமையில் பணிக்குழு செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழு மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ள ஆக்சிஜன் மற்றும் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் எவ்வாறு விநியோகிக்கப்படுகிறது என்று ஆய்வு செய்யும்.