கருப்பு பூஞ்சை தொற்று நோயாக அறிவிப்பு – மத்திய அரசு உத்தரவு!!

0
கருப்பு பூஞ்சை தொற்று நோயாக அறிவிப்பு - மத்திய அரசு உத்தரவு!!
கருப்பு பூஞ்சை தொற்று நோயாக அறிவிப்பு - மத்திய அரசு உத்தரவு!!
கருப்பு பூஞ்சை தொற்று நோயாக அறிவிப்பு – மத்திய அரசு உத்தரவு!!

மாநில அரசுகள் கருப்பு பூஞ்சை நோயை பெருந்தொற்றாக அறிவிக்க வேண்டும் என்றும், குறிப்பிட்ட மருத்துவ முறையை பின்பற்ற வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

மத்திய அரசு உத்தரவு:

கர்நாடகா, மராட்டியம், தெலுங்கானா, மத்தியபிரதேசம் மற்றும் பீஹார் போன்ற மாநிலங்களில் கருப்பு பூஞ்சை நோயின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் இந்த கருப்பு பூஞ்சை (Mucormycosis) நோயை பெருந்தொற்றாக அறிவிக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்திற்கு கூடுதல் ஆக்சிஜன் ஒதுக்கீடு – மத்திய அரசு உத்தரவு!!

சமீப காலமாக இந்தியாவில் பரவி வரும் இந்த நோய் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது தொற்றினால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களுக்கு அதிக அளவில் பரவி வருகிறது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதில், தொற்று நோய்கள் சட்டம் 1897ன் கீழ் கருப்பு பூஞ்சை நோயும் தொற்றுநோய் தான். கருப்பு பூஞ்சை நோயை கண்டறிந்தல் மற்றும் அதற்கான சிகிச்சை அளிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் அனைத்தும் ஐ.சி.எம்.ஆர்.,ரின் வழிகாட்டு நெறிமுறை வழிகாட்டுதல்களையே கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!