தமிழகத்தில் முழு ஊரடங்கு நீட்டிப்பு? முதல்வர் ஆலோசனை!!
மே 24 ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின், அனைத்து கட்சிகளின் எம்எல்ஏக்கள் குழுவுடன் வரும் 22 ஆம் தேதி ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
முழு ஊரடங்கு
கொரோனா இரண்டாம் அலை தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் மே 10 முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்திலும் தமிழகத்தில் கொரோனா புதிய பாதிப்புகள் தினசரி 34 ஆயிரம் வரை பதிவு செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஒரு நாளைக்கு 300க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் பலியாகி வருகின்றனர். இதை தடுக்கும் விதமாக 2 வாரங்களுக்கு முழு ஊரடங்குடன் கூடிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு உத்தரவு மே 31 வரை நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
ஆனால் இந்த பொது முடக்க காலத்திலும் மக்கள் வழக்கம் போலவே வெளியே நடமாடி வருகின்றனர். பொது இடங்களில் முகக்கவசங்களை அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் காணப்படுகின்றனர். கொரோனாவின் கோரத்தாண்டவத்தை கண்கூடாக பார்த்தும், எவ்வித அச்சமும் இல்லாமல் மக்கள் பொது இடங்களில் காணப்படுவது வருத்தம் தரக்கூடியதாக இருக்கிறது. இதனால் தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்துவது தான் கொரோனா தொற்றை பரவாமல் தடுக்க ஒரே தீர்வாகும் என மருத்துவ வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் தமிழகத்தில் வரும் வாரங்களில் தான் கொரோனா பரவல் தாக்கம் உச்சத்தை தொடும் என ஆய்வுகள் கூறுகிறது. அதனால் பொது முடக்கம் அமலில் இருப்பதால் மாத்திரமே மக்கள் பாதுகாக்கப்படுவார்கள். இந்த சூழலில் தமிழக மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் முக ஸ்டாலின் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
TN Job “FB
Group” Join Now
இந்த ஆய்வு பணிகள் முடித்து 21 ஆம் தேதி சென்னை திரும்பும் முதல்வர், 22ஆம் தேதி அனைத்துக்கட்சிகளின் எம்எல்ஏக்கள் குழுவுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் விஜயபாஸ்கர், ஜவாஹிருல்லா, ஈஸ்வரன் உள்பட 13 எம்எல்ஏக்கள் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும், ஊரடங்கு நீட்டிப்பு குறித்தும் ஆலோசனை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.