ரேஷன் கடைகளில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் தோறும் 4 தேங்காய் வழங்குவதற்கு அரசுக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேங்காய் விநியோகம்:
கடந்த பல மாதங்களாக தமிழகத்தில் உள்ள தேங்காய் உற்பத்தியாளர்கள் அரசு தேங்காய் விவசாயிகளிடமிருந்து நேரடியாக தேங்காய்களை கொள்முதல் செய்து ரேஷன் கடைகளின் மூலமாக மக்களுக்கு விநியோகிக்க வேண்டும் என்றும், இதேபோல் வெளிநாடுகளில் இருந்து வாங்கும் பாமாயிலை தவிர்த்து தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்றும், இதன் மூலமாக விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
TNPSC குரூப் 4 தேர்வில் 50 நாளில் வெற்றி பெற அரிய வாய்ப்பு – முழு விவரங்கள் இதோ!
இந்நிலையில், மக்களவை தேர்தல் தமிழகத்தில் நெருங்கி உள்ள வேளையில், தற்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசும்போது ரேஷன் கடைகளில் மாதம்தோறும் 4 தேங்காய்கள் கொடுக்க தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருவதாகவும், இதற்காக பாஜக போராடுவதாகவும் தெரிவித்துள்ளார்.