கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மழை பொழிவு பதிவாகியுள்ளது.
வானிலை அப்டேட்:
தமிழகத்தில் கடந்த வாரம் முதல் ஆங்காங்கே மழை பொழிந்து வெப்பநிலையை சற்று குறைத்து வருகிறது. இந்நிலையில் தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஆனால் வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
TNPSC குரூப் 4 தேர்வில் 50 நாளில் வெற்றி பெற அரிய வாய்ப்பு – முழு விவரங்கள் இதோ!
தொடர்ந்து ஏப்ரல் 17ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், ஏப்ரல் 18 மற்றும் 19ஆம் தேதி தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இன்று இலட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக் கூடும் என்பதால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.