பெண்களுக்கு இலவச ஷேர் ஆட்டோ – சற்று முன் வெளியான அறிக்கை!

0
பெண்களுக்கு இலவச ஷேர் ஆட்டோ - சற்று முன் வெளியான அறிக்கை!

தென் சென்னையில் பாஜக கட்சி சார்பாக போட்டியிடும் தமிழிசை சவுந்தரராஜன் தனது தேர்தல் அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளார். இதில் பெண்களுக்கு இலவச ஷேர் ஆட்டோ வழங்குவதற்கான திட்டம் இடம்பெற்றுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

இலவச ஷேர் ஆட்டோ:

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி லோக்சபா தேர்தலானது நடைபெறவுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் தேர்தலுக்கான ஏற்பாடுகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தேர்தல் பிரச்சாரங்களும் சூடுபிடித்து வருகிறது. மேலும் நாளையுடன் தேர்தல் பிரச்சாரங்கள் முடிக்கப்பட வேண்டும் எனவும் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷனானது உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பாஜக கட்சி சார்பாக தென் சென்னையில் போட்டியிடும் தமிழிசை சவுந்தரராஜன் தனது தேர்தல் அறிக்கையை இன்று (ஏப்ரல் 16) வெளியிட்டுள்ளார்.

TNPSC குரூப் 4 தேர்வில் 50 நாளில் வெற்றி பெற அரிய வாய்ப்பு – முழு விவரங்கள் இதோ!

இந்த அறிக்கையானது ‘#அக்கா 1825’ என்னும் பெயரில் வெளிவந்துள்ளது. இவ்வறிக்கையில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகள் அனைத்தும் தென் சென்னைக்காக தனியே தானே வகுத்த செயல் திட்டங்கள் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த அறிக்கையில் ஆண்டுக்கு 10,000 பெண்களுக்கு உத்தரவாதமான வேலை வாய்ப்புகளுடன் பயிற்சி அளிப்பதற்கு மையங்கள் அமைக்கப்படும் என்றும், பணிபுரியும் பெண்களுக்காக மோடி இலவச ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!