தமிழகத்தில் பரவத் தொடங்கிய குரங்கு அம்மை – 4 பேருக்கு அறிகுறிகள்! அச்சத்தில் பொதுமக்கள்!
இந்தியாவில் புதிதாக பரவி வரும் குரங்கு அம்மை கேரளா, டெல்லி, ஹைதராபாத் உள்ளிட்ட மாநிலங்களில் பரவி வந்த நிலையில் தற்போது தமிழகத்தில் எட்டி பார்க்கத் தொடங்கியுள்ளது. இதுவரை 4 பேர் அறிகுறிகளுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குரங்கு அம்மை:
இந்தியாவில் கொரோனாவை தொடர்ந்து குரங்கு அம்மை நோய் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பரவி வந்த குரங்கு அம்மை தற்போது இந்தியாவிலும் அதிகமாக பரவத் தொடங்கியுள்ளது. முதலில் கேரளாவில் நுழைந்த குரங்கு அம்மை இப்போது தலைநகர் டெல்லியையும் எட்டிவிட்டது. குரங்கு அம்மை நோய் என்பது ஒரு வகையான அம்மை நோய் ஆகும். இது வைரஸ் தொற்றினால் பரவுகிறது. மேலும் இந்த நோயின் அறிகுறிகளாக காய்ச்சல், உடல் வலி, தலைவலி, முதுகு வலி, உடல் நடுக்கம், சோர்வடைதல் போன்றவை இருக்க கூடும் என கூறப்படுகிறது. இந்த அறிகுறிகள் தோன்றி 5 நாட்களுக்குள் உடலில் சிவப்பு நிற புள்ளிகள், கொப்புளங்கள் தோன்றும்.
Exams Daily Mobile App Download
தற்போது குரங்கு அம்மை பரவல் ஜூலை 2வது வார நிலவரப்படி 63 நாடுகளில் 9,200 பேருக்கு பரவியுள்ளது. இதில் பெரும்பாலான பாதிப்புகள் அமெரிக்க, ஐக்கிய நாடுகளிலேயே பரவியுள்ளது. ஆப்பிரிக்கா, ஆசியா, மத்திய கிழக்கு நாடுகளில் மிக குறைவான பாதிப்புகளே உள்ளன. மேலும் இந்த தொற்று பரவலை உலக அவசர நிலையாக அறிவிக்கப்படுமா என்று அனைவரும் எதிர்பார்த்துள்ளனர். இருப்பினும் குரங்கு அம்மை நோய் கொரோனாவை போல கொடுமையான நோய் இல்லை, நோயாளியுடன் தொடுதல் மற்றும் நெருக்கமான தொடர்புகள் மூலம் பரவுகிறது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு
கடந்த சில தினங்களுக்கு முன்பு தலைநகர் டெல்லியில் 31 வயதான மவுலானா ஆசாத் என்பவருக்கு நேற்று குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டது. இதே போல் தெலுங்கானாவிலும் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டுள்ளது. குவைத்திலிருந்து நாடு திரும்பியுள்ள 40 வயது நபருக்கு குரங்கு அம்மை தொற்று இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 4 பேருக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் இருப்பதாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி வில்லுக்குறி பகுதியை சேர்ந்த 4 பேரின் ரத்த மாதிரிகள் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.