மாநிலத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அரசு வழங்கும் உதவித்தொகை!
டெல்லி மாநிலத்தில் உள்ள வேலை இல்லாமல் தவித்து வரும் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வைத்து இருந்தால் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்தப் பதிவு மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வரை நிதியுதவி வழங்க பட உள்ளது என்றும் கூறியுள்ளனர்.
பட்டதாரிகளுக்கு உதவித்தொகை:
இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக 2020 ஆம் ஆண்டில் இருந்து பள்ளிகளும், கல்லூரிகளும் அரசின் ஊரடங்கின் காரணமாக மூடப்பட்டது. அதன் பின்னர் நிறைய தளர்வுகள் கொடுக்கப்பட்டாலும் பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், கொரோனா கட்டுப்பாடு குறைந்ததை தொடர்ந்து, பல மாதங்களுக்கு பிறகு சென்ற ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் துவங்கப்பட்டு நேரடியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இதனை தொடர்ந்து 1 முதல் 8 ஆம் வகுப்புகளும் தொடங்கப்பட்டது.இந்த வருடம் கண்டிப்பாக 10, 11 மற்றும் 12 படிக்கும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் இருக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவித்து இருந்தனர். இதனை தொடர்ந்து நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்கள் சார்பில் பொதுத் தேர்வுக்கான தேதிகளையும் அறிவித்து உள்ளனர்.
TNPSC Group 4 VAO தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – இதுவரை 8 லட்சம் பேர் விண்ணப்பம்!
இந்த நிலையில் நமது நாட்டின் தலைநகரான டெல்லியில் வேலை இல்லாமல் தவித்து வரும் இளைஞர்களுக்கு மாநில அரசு முக்கிய அறிவிப்பை தெரிவித்து உள்ளது. மேலும் இந்த அறிவிப்பு பட்டதாரிகளுக்கு மிகவும் ஹேப்பியான செய்தியாகவும் மாறியுள்ளது. இந்த அறிவிப்பு என்னவென்றால், வேலை இல்லாமல் தவித்து வரும் இளங்கலை பட்டதாரிகளுக்கு மாதம்தோறும் ரூ 5, 000 மற்றும் முதுகலை பட்டதாரிகளுக்கு ரூ.7,500 உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
ExamsDaily Mobile App Download
இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க தேவையான விதிமுறைகள், டெல்லி அரசின் கீழ் உள்ள https://jobs.delhi.gov.in/ என்ற இணையதளத்துக்கு செல்லவும். அதன் பின்னர் முகப்புப் பக்கத்தில் உள்ள ‘Job Seeker’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.உடனே ஒரு புதிய பக்கம் திறக்கும். அதன் பின்னர் அனைத்து கல்வித்தகுதிகளையும் அப்ளை செய்யவும். அதன் பிறகு, உங்கள் மொபைலில் பதிவு ஐடி மற்றும் கடவுச்சொல் வரும். அதை வைத்து உள்நுழைய வேண்டும்.இப்போது ’Edit or Update Profile’ என்ற விருப்பத்தைக் கிளிக் செய்யவும். ஒரு புதிய பக்கம் திறக்கும். அதில் உங்கள் பதிவு எண், மொபைல் எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும். கடைசியாக ‘submit’ பட்டனை கிளிக் செய்தால் போதும் விண்ணப்ப கோரிக்கை அனுப்ப படும். இதற்கு பதிவு செய்ய தேவையான ஆவணங்கள் ஆதார் அட்டை, பான் கார்டு, குடியிருப்பு சான்றிதழ், மொபைல் எண், பட்டதாரி அல்லது முதுகலை பட்டதாரி ஆக இருந்தால் அதற்கான மதிப்பெண் பட்டியல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை வைத்து கொள்ளவும்.