TNPSC Group 4 VAO தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – இதுவரை 8 லட்சம் பேர் விண்ணப்பம்!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 பதவியில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் 7301 காலிப் பணியிடங்களுக்கு 8 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளனர்.
குரூப் 4 தேர்வு:
தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் TNPSC எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வுகள் நடத்தப்பட்டு நிரப்பப்படும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த ஆண்டு தேர்வு குறித்த அறிவிப்புகள் ஒன்று ஒன்றாக வெளியாகி இருக்கிறது . அதன் படி குரூப் 4 பதவியில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர்(விஏஓ) 274 இடங்கள், ஜூனியர் அசிஸ்டெண்ட் 3,681, தட்டச்சர் 2108, சுருக்கெழுத்து தட்டச்சர்(கிரேடு 3) 1024 என 7138 இடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் – அகவிலைப்படி (DA) உயர்வு அறிவிப்பு!
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் ஜூனியர் அசிஸ்டெண்ட், பில் கலெக்டர், சுருக்கெழுத்து தட்டச்சர் பதவியில் 163 இடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தம் குரூப் 4 பதவியில் 7,301 இடங்கள் போட்டி தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. மேலும் விளையாட்டு வீரர்களுக்கான 81 இடங்களும் நிரப்பப்பட உள்ளது. இந்த குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 30 முதல் விண்ணப்பிக்க தொடங்கலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வுகளுக்கு அதிகபட்ச கல்வி தகுதி 10 ஆம் வகுப்பு ஆகும்.
ExamsDaily Mobile App Download
இதனால், 10ம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை போட்டி போட்டு கொண்டு விண்ணப்பித்து வருகின்றனர். அதிக அளவில் இளைஞர்கள் விண்ணப்பிக்க தொடங்கி இருக்கின்றனர். இதுவரை வெளியான தகவலின் படி 7301 காலிப் பணியிடங்களுக்கு 8.39 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மேலும் வருகிற 28ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில் தினசரி விண்ணப்பித்து வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் கடைசி தேதி வரை காத்திருக்காமல் விரைவில் விண்ணப்பிக்க வேண்டும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.