மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் – அகவிலைப்படி (DA) உயர்வு அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி முன் திருத்தப்பட்ட ஊதிய விகிதத்தில் அல்லது 5வது சிபிசியின் தர ஊதியத்தில் ஊதியம் பெறும் பணியாளர்கள் தற்போதுள்ள 368 சதவீதத்தில் இருந்து 381 சதவீதமாக உயர்த்தி பெற உள்ளனர்.
ஜாக்பாட் அறிவிப்பு:
கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. அரசுக்கு வரிவசூல் குறைந்து வருமானம் பாதிக்கப்பட்டதால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டது. பின்னர் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்டதால் அரசு ஊழியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட பலன்கள் படிப்படியாக மீண்டும் வழங்கப்பட்டது. அதன்படி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் மத்திய தன்னாட்சி அமைப்புகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.
ராஜா ராணி 2 சீரியல் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ் – ஆர் யூ ரெடி திருநெல்வேலி மக்களே!
எனவே மத்திய அரசு ஊழியர்களுக்கு முன் திருத்தப்பட்ட ஊதிய விகிதத்தில் அல்லது 5வது சிபிசியின் தர ஊதியத்தில் ஊதியம் பெறும் மத்திய அரசு, தற்போதுள்ள 368 சதவீதத்தில் இருந்து 381 சதவீதமாக உயர்த்தியுள்ளது. முன் திருத்தப்பட்ட 6வது CPC ஊதிய விகிதத்தில் அல்லது தர ஊதியத்தில் ஊதியம் பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு, அவர்களின் டிஏவை 196 சதவீதத்தில் இருந்து 203 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இந்த புதிய DA ஜனவரி 1, 2022 முதல் அமலுக்கு வரும் என்று நிதி அமைச்சகத்தின் செலவினத் துறையால் வெளியிடப்பட்ட அலுவலக குறிப்பேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ExamsDaily Mobile App Download
மத்திய அரசின் இந்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி அகவிலைப்படி உயர்வை தொடர்ந்து வீட்டு வாடகைப்படியும் உயர்த்தப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இவ்வாறு மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்தடுத்த சூப்பர் அறிவிப்புகள் வெளியாகி வரும் நிலையில் மாநில அரசும் அதன் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட பலன்களை வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.