நாடாளுமன்றத்தின் மக்களவை தேர்தல் தொடர்பான விதிமுறைகள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் புதிய தகவலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தல்:
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிய உள்ள நிலையில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தமிழகத்தில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஜூன் ஒன்றாம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணும் பணி ஜூன் 4-ம் தேதி அன்று நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
CUET நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச்.31 இறுதி நாள் – கால அவகாசம் நீட்டிப்பு!
இந்நிலையில் நாடு முக்குவதும் தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பான பல்வேறு உத்தரவுகளும் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. தற்போது தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு அவர்கள் வாக்குச்சாவடி மையங்களுக்குள் வாக்களிக்க செல்லும்போது வாக்காளர்கள் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்காளர்கள் அனைவரும் தவறவிடாமல் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.