CUET நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச்.31 இறுதி நாள் – கால அவகாசம் நீட்டிப்பு!
CUET நுழைவு தேர்வுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மார்ச் 26 இறுதி நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கால அவகாசம் நீட்டிப்பு:
மத்திய அரசின் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்பில் மாணவர் சேர்க்கை CUET நுழைவு தேர்வின் வாயிலாக நடத்தப்படுகிறது. தமிழ் உட்பட 13 மொழிகளில் கூட்டு நுழைவு தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. 2024ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான க்யூட் நுழைவுத் தேர்வின் விண்ணப்ப பதிவுகள் பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் தொடங்கியது. முன்னதாக மார்ச் 26 ஆம் தேதி வரை மாணவர்கள் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இனி WhatsApp மூலம் வெளிநாடுகளுக்கும் ‘இதை’ அனுப்பலாம் – வியப்பில் பயனர்கள்!
தற்போது க்யூட் நுழைவு த தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், விண்ணப்பங்களை திருத்தம் செய்ய ஏப்ரல் மூன்றாம் தேதி கடைசி நாளாகவும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. குறிப்பாக மே 15 மற்றும் மற்றும் மே 31 ஆகிய நாட்களில் இரண்டு கட்டங்களாக நுழைவு தேர்வுகள் நடைபெற உள்ளது. தேர்வின் முடிவுகள் ஜூன் 30-ம் தேதி வெளியாகும் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.