இந்தியாவில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மை – அரசு ஆலோசகர் கருத்து!
இந்தியாவில் வேலைவாய்ப்பின்மைக்கு அரசால் தீர்வு காண முடியாது என தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் கருத்து தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பின்மை
இந்தியாவில் கொரோனா காலகட்டத்தில் வேலைவாய்ப்பின்மை அதிகமாக இருந்தது. அதனால் அதை குறைக்கவும், புதிய வேலைவாய்ப்பை உருவாக்கவும், வேலைவாய்ப்பு திறனை மேம்படுத்தவும் மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனாலும் வேலைவாய்ப்பின்மை என்பது தொடர் கதையாக இருந்து வருகிறது. கடந்த ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக பல தனியார் நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.
CUET நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச்.31 இறுதி நாள் – கால அவகாசம் நீட்டிப்பு!
அதனால் வேலைவாய்ப்பின்மை மேலும் அதிகரித்து இருக்கிறது. இது குறித்து அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது வேலைவாய்ப்பு திண்டாட்டத்தை ஒன்றிய அரசு சரி செய்ய முடியாது. அனைத்து சமூக பொருளாதார பிரச்சனைக்கும் அரசு தீர்வு காண வேண்டும் என எதிர்பார்ப்பது தவறானது,. தனியார் நிறுவனங்கள் தான் பணியமர்தலை செய்ய வேண்டும். தனியார் துறையில் வேலைவாய்ப்புகளை பெருக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.