இனி WhatsApp மூலம் வெளிநாடுகளுக்கும் ‘இதை’ அனுப்பலாம் – வியப்பில் பயனர்கள்!
WhatsApp செயலியில் ஏற்கனவே செயல்பாட்டில் இருந்து வரும் UPI வாயிலாக பணம் அனுப்பும் செயல்பாட்டில் மேலும் அதிக நபர்கள் பயனடையும் வகையில் புதிய மாற்றத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அப்டேட்:
உலக அளவில் அதிக மக்கள் பயன்படுத்தி வரும் WhatsApp செயலியில் அடிக்கடி பயனர்களின் வசதிக்காக புதிய அப்டேட்கள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தகவல் பரிமாற்ற செயலியாக தொடங்கிய WhatsApp தற்போது பல வகையான டிஜிட்டல் சேவைகளையும் செய்து வருகிறது. கடந்த 2020 இல் வாட்ஸ் அப் நிறுவனம் செயலியின் மூலமாகவே பணம் அனுப்பும் சேவையை இந்தியாவில் தொடங்கியது. இதனால் நாம் சாட் செய்யும் போதே பணத்தை அனுப்பவோ, பெறவோ முடியும்.
இந்த தினங்களில் பொதுவிடுமுறை இல்லை – பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு!
இந்த சேவையானது முன்னதாக இந்தியாவிற்குள் மட்டுமே செலுத்தும் வகையில் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் WhatsApp செயலியின் புதிய அப்டேட் வாயிலாக இனி யுபிஐ பேமெண்ட்ஸ் மூலம் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கும் பணம் அனுப்பும் முறையை விரைவில் செயல்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் அப்பின் இந்த புதிய அப்டேட் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.