இந்த தினங்களில் பொதுவிடுமுறை இல்லை – பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

0

இந்த தினங்களில் பொதுவிடுமுறை இல்லை – பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் மார்ச் 29, 30, 31 ஆம் தேதி பொது விடுமுறையாக இருந்தாலும் சென்னை மாநகராட்சி வருவாய்த்துறை இயங்கும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

வெளியான அறிவிப்பு

தமிழகத்தில் மார்ச் 29 ஆம் தேதி புனித வெள்ளியை முன்னிட்டு பொதுவிடுமுறை ஆகும். அதே போல மார்ச் 30 சனிக்கிழமை விடுமுறை, மார்ச் 31 ஞாயிற்றுக்கிழமை விடுமுறை ஆகும். ஆனால் ஏப்ரல் 1 ஆம் தேதி புதிய நிதியாண்டு தொடங்குவதால் பொதுமக்கள் நலன் கருதி வங்கிகள் இயங்கும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டது.

ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை – இன்றைய அப்டேட்!

அதனை தொடர்ந்து சென்னை மாநகராட்சி வருவாய்த்துறை முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது பொதுமக்களின் நலன் கருதி சொத்துவரி, தொழில்வரி மற்றும் நிறுமவரி செலுத்துவதற்காகவும், தொழில் உரிமம் புதுப்பித்தலுக்காகவும், பெருநகர் சென்னை மாநகராட்சி வருவாய்த் துறையானது மார்ச் 29, மார்ச் 30, மார்ச் 31 ஆகிய பொதுவிடுமுறை நாட்களில் இயங்கும். எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!