ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை – இன்றைய அப்டேட்!
ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக அதிகபட்ச விலை உயர்வை சந்தித்து வருகிறது. அந்த வகையில் இன்று அதிரடியாக சவரனுக்கு ரூபாய் 120 உயர்ந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கத்தின் விலை:
ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்கள் வழக்கமான நிகழ்வாக இருந்த போதிலும் அதிகபட்ச விலை உயர்வு மக்களை அதிர்ச்சி அடைய செய்கிறது. கடந்த பத்து நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அந்த வகையில் நேற்றைய விலையை விட இன்று சவரனுக்கு ரூபாய் 120 உயர்ந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 22 கேரட் தங்கம் ஒரு சவரன் ரூபாய் 49 ஆயிரத்து 720க்கும், ஒரு கிராம் ரூபாய் 6215க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் 24 கேரட் தூய தங்கம் ஒரு சவரன் ரூபாய் 53,480 க்கும், ஒரு கிராம் ரூபாய் 6685 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
2024 – 25 கல்வி ஆண்டுக்கான பாடத்திட்டங்கள் வெளியீடு – CBSE வாரியம் தகவல்!
இதனைத் தொடர்ந்து வெள்ளியின் விலையானது சில்லறை விற்பனையில் கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூபாய் 80.20 காசுகளுக்கும், ஒரு கிலோ 80 ஆயிரத்து 200 க்கும் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தங்கத்தின் விலை ஏற்றம் சுப முகூர்த்த காரியங்கள் திட்டமிட்டுள்ள மக்களுக்கு கவலை அளிக்கக் கூடிய வகையில் உள்ளது.